வியாழன், 7 மார்ச், 2024

*சர்வதேச மகளிர் தினம் : சேலத்தில் தனியார் கல்லூரி முதல்வரை கைது செய்ய வலியுறுத்தி பெண்கள் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்*

*சேலம், S.K. சுரேஷ்பாபு*


சேலம் சௌடேஸ்வரி கல்லூரியின் முதல்வர் கல்லூரி மாணவிகள் மற்றும் ஆசிரியைகள் மீதான பாலியல் அத்துமீறலை கண்டித்து மாதர் சங்கம், வாலிபர் சங்கம், மாணவர் சங்கம் சார்பாக கோட்டை மைதானத்தில் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்திருந்த நிலையில், தொடர்ந்து நடைபெற்ற போராட்டத்தில் காவல்துறையின் அத்துமீறிய தாக்குதலை கண்டித்து குறிப்பாக உதவி ஆய்வாளர் கோகிலா அவர்களின் செயல்பாட்டை கண்டித்து, அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். 
காவல்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்களை அருகே உள்ள கமலா மகாலில் அடைத்து வைத்தனர். மேலும் காவல்துறையினருடன் தலைவர்கள் பேச்சு வார்த்தை நடத்த வருகின்றனர்.


শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: