செவ்வாய், 5 மார்ச், 2024

மொடக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டம்

அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பாக மொடக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் இன்று காலை 11 மணிக்கு நடைபெற்றது.

ஈரோடு கோட்டாட்சியர் மாதாந்திர மாற்றுத்திறனாளிகள் குறைதீர்ப்பு கூட்டத்தை கொடுமுடி, மொடக்குறிச்சி, ஈரோடு, பெருந்துறை வட்டாட்சியர் அலுவலகங்களில் நடத்த வேண்டும்.
100 நாள் வேலை திட்டத்தில் நான்கு மணிநேர வேலைக்கு முழு ஊதியம் வழங்கப்பட வேண்டும். இணைவு சக்கர வாகனங்களுக்கு லைசன்ஸ் வழங்க முகாம் நடத்த வேண்டும்.

பஸ் பாஸ் ரயில் பாஸ் போன்றவைகளில் அந்தந்த ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள் சான்றிட்டு தரவேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடைபெற்றது. 
இந்த போராட்டத்திற்கு சங்கத்தின் தாலுகா செயலாளர் சொங்கப்பன் தலைமை தாங்கினார்.

அகில இந்திய செயல் தலைவர் அன்பு ராஜன், மாவட்டத் துணைத் தலைவர் மாரிமுத்து, 
கொடுமுடி தாலுகா செயலாளர் சசி, மாவட்ட குழு உறுப்பினர் ரேணுகா,
மாவட்ட பொருளாளர் ராஜு, 
மாவட்டத் துணைத் செயலாளர் சேகர்,
ஈரோடு உழைக்கும் மக்கள் தொழிற்சங்க பொதுச்செயலாளர் முருகேசன்,
இந்திய ஜனநாயக வாலிபர் சங்க
மாவட்ட பொருளாளர் லோகநாதன் உள்பட மாற்றுத்திறனாளிகள் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: