வெள்ளி, 8 மார்ச், 2024

ஈரோட்டில் ஒருங்கிணைந்த காய்கறி, மளிகைச் சந்தையை அமைக்க கோரி மனு

ஈரோட்டில் ஒருங்கிணைந்த காய்கறி மற்றும் மளிகைச் சந்தையை அமைக்க வேண்டும் என்று காய்கறி வியாபாரிகள் சங்கத்தினர் மாநகராட்சி ஆணையாளரிடம் மனு அளித்தனர். 

ஈரோட்டில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் காய்கறி சந்தை சுமார் 200 வருடங்களாக இயங்கி வருகிறது. தற்போது, மாநகர் பகுதியில் வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளதால் காய்கறி மொத்த வியாபாரிகளுக்கென ஈரோடு சோலார் அருகே புதிதாக இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அங்கு சென்று காய்கறி மற்றும் கனி வணிகம் செய்து கொள்ளலாம் என அரசு தரப்பில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பகுதியில் ஒருங்கிணைந்த மெகா காய்கறி, பழம் மற்றும் மளிகை சந்தை அமைக்க அரசு துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த காய்கறி வணிகத்தில் சுமார் 2000-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளதால் சோலார் பகுதியில் முறையான ஓய்வு இல்லம் ,கழிப்பறை, தண்ணீர் மற்றும் வாகன நிறுத்துமிட வசதிகளை செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்து மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தியிடம் வியாபாரிகள் சங்கத்தினர் மனு அளித்தனர்.

இதுகுறித்து நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் காய்கறி வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் பழனிச்சாமி, ஆனந்தராஜ் ஆகியோர் கருத்து தெரிவிக்கும் போது, ஈரோடு மாநகரின் எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு சோலார் பகுதியில் வணிகம் செய்ய தக்க ஏற்பாடுகள் செய்து தர வேண்டுமென கருத்து தெரிவித்தனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: