செவ்வாய், 23 ஏப்ரல், 2024

ஈரோட்டில் நிழல் சண்டை செயல் முறையில் அசத்திய கராத்தே வீரர், வீராங்கனைகள்: பெற்றோர்கள் நெகிழ்ச்சி

ஈரோட்டில் ஜித்தோகாய் கராத்தே பயிற்சி பள்ளி சார்பில், மாணவர்களுக்கு தகுதியின் அடிப்படையில் பெல்ட் வழங்கும் நிகழ்வு ரயில்வே காலனி காவேரி பள்ளியில் நடைபெற்றது. ஜித்தோகாய் கராத்தே பள்ளியின் அகில இந்திய துணைச் செயலாளர் சக்திவேல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

5 வயது முதல் 21 வயது வரையிலான மாணவர்களுக்கு கட்டா எனப்படும் நிழல் சண்டை பிரிவில் போட்டிகள் நடத்தப்பட்டது. கத்தா எனப்படும் கராத்தே தற்காப்பு உத்திகளை பயன்படுத்தி, தாக்குதல் நடத்த வருபவர்களிடமிருந்து, தங்களை தற்காத்துக் கொள்ளும் விதம் குறித்தும், சாலையில் செல்லும் பெண்களிடம் நகை பறித்துச் செல்லும் வழிப்பறி திருடர்களிடமிருந்து காப்பாற்றிக் கொள்ளும் நிழல் சண்டை முறைகள் குறித்தும் மாணவர்கள் கராத்தே பயிற்சிகளின் மூலம் செயல்முறை விளக்கம் அளித்தனர்.

இதனையடுத்து தகுதியின் அடிப்படையில் வெற்றி பெற்ற காரத்தே வீரர் வீராங்கனைகளுக்கு மஞ்சள், ஆரஞ்சு, பச்சை, நீலம், கத்திரி, பிரவுன்- 2, பிரவுன்- 1, கருப்பு ஆகிய 8 விதமான பட்டைகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்ட தலைவர் சந்திரசேகர், செயலாளர் கோவிந்தராஜ், பொருளாளர் மணி, தொழில்நுட்ப இயக்குனர் கீர்த்தி வாசன், துணைச் செயலாளர் பாபு துணைத் தலைவர் யுத்தேஷ், பூர்ணிமாதேவி, காசி விசாலாட்சி உட்பட பெற்றோர்கள் என திரளானோர் பங்கேற்றனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: