செவ்வாய், 28 மே, 2024

ஈரோட்டில் செல்போன் கடையின் தகர சீட்டை உடைத்து 56 விலை உயர்ந்த செல்போன் திருட்டு

ஈரோடு ஜி.ஹெச்.ரவுண்டானாவில் செல்போன் ஒன்று கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடை தகர செட்டால் ஆனது. ராதாகிருஷ்ணன் இந்த செல்போன் பகடையில் உரிமையாளராக இருந்து வருகிறார். நேற்று இரவு வழக்கம்போல் வியாபாரம் முடிந்ததும் ஊழியர்கள் கடையை பூட்டி விட்டு சென்றுவிட்டனர். இன்று காலை மீண்டும் ஊழியர்கள் கடையை திறந்து உள்ளே சென்றனர். 

அப்போது கடையில் பொருட்கள் சிதறி கிடந்தன. கடையில் இருந்த விலை உயர்ந்த 56 ஸ்மார்ட் செல்போன்கள் திருட்டு போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதுபோல் கல்லாப்பெட்டியும் திறந்து கிடந்தது. அதிலிருந்த பணம் ரூ.15,000 திருட்டு போயிருந்தது.

இதுகுறித்து ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது கடையின் பின்பகுதியில் உள்ள தகர சீட்டை உடைத்து மர்ம நபர்கள் செல்போன் கடைக்கு வந்து விலை உயர்ந்த செல்போன்களை திருடி சென்றது தெரியவந்தது. திருட்டு போன செல்போன்களின் மதிப்பு ரூ.9 லட்சம் இருக்கும்.

இதுகுறித்து ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை போலீசார் வழக்குபதிவு செய்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: