ஈரோடு அட்வகேட் அசோசியேசன் 2024- 25 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா ஈரோடு சம்பத் நகர் ஐஎம்ஏ ஹாலில் நடைபெற்றது .
அதன்படி சங்கத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய தலைவராக பி.பி.துரைசாமி, செயலாளராக கே.எஸ்.சண்முகசுந்தரம், பொருளாளராக அருண் கணேஷ், துணைத் தலைவராக எல்.பாலசுப்பிரமணியம் , இணைச் செயலாளராக என்.குமரேசன் , நூலகராக பி.கார்த்திகேயன், செயற்குழு உறுப்பினர்களாக ஏ.சுந்தரம், எம்.சரவணன், சி.முத்துகுமார், எம்.தன்ராஜ், பி.தனசேகரன், பி.மகேஸ்வரி, கே.நவமணி , பி.யசோதா, எம்.வேல்முருகன் ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர்.
சங்கத்தின் முன்னாள் தலைவர் ஈஸ்வரமூர்த்தி தனது பொறுப்பை புதிய தலைவர் பி.பி.துரைசாமி இடம் ஒப்படைத்தார். பதவியேற்ற புதிய நிர்வாகிகளுக்கு ஈரோடு மாவட்ட மூத்த வழக்கறிஞரும் , கொங்கு கல்வி நிறுவனங்களின் மூத்த அறக்கட்டளை உறுப்பினருமான பி.சி. பழனிசாமி, கிருஷ்ணமூர்த்தி , சண்முகம் , நவநீதகிருஷ்ணன், நல்லசிவம், பாலசுப்ரமணியம் , சங்கத்தின் முன்னாள் தலைவர் தாடி என். சரவணன், முன்னாள் செயலாளர் முருகானந்தம் உள்பட வழக்கறிஞர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர் .
0 coment rios: