வெள்ளி, 3 மே, 2024

சேலம் மாவட்ட வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் நேரடி வெள்ளி மாளிகை திறப்பு விழா. கைவினைஞர்களின் தயாரிப்புகளை குறைந்த விலையில் பெற்று பயன் பெற பொதுமக்களுக்கு கோரிக்கை.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு.


சேலம் மாவட்ட வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்கள் கைவினைஞர்கள் நல சங்கத்தின் நேரடி விற்பனை மையம் திறப்பு. 

சேலம் மாவட்ட வெள்ளி கொலுசு உற்பத்தியாளர் கைவினைஞர்கள் தயாரிப்பில் உருவான வெள்ளி பொருட்களின் நேரடி விற்பனை மையம் ஶ்ரீ சாஜ் என்ற பெயரில் வெள்ளி மாளிகை சேலத்தை அடுத்துள்ள பனங்காடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. 

இன்று நடைபெற்ற திறப்பு விழாவில் சேலம் அம்மாபேட்டை பழனியாண்டி முதலியார் நினைவு மருத்துவமனை நிர்வாகியும், சம்மந்தம் ஸ்பின்னிங் மில்ஸ் தலைவர்மான திரு தேவராஜ் முத்து விளக்கேற்றி வெள்ளி மாளிகையை திறந்து வைத்தார். 

சேலம் மாநகர தங்கம் வெள்ளி வைர வியாபாரிகள் சங்க தலைவரும், சேலம் ஏ என் எஸ் ஜுவல்லரிஸ் உரிமையாளருமான ஆனந்த் குமார் முதல் விற்பனையினை துவக்கி வைத்தார்.

இந்த வெள்ளி மாளிகையில் அனைத்து விதமான வெள்ளி கொலுசுகளும், வெள்ளிப் பொருட்களும் தரமான முறையில் குறைந்த விலையில் கிடைக்கும் என்றும் திறப்பு விழாவை முன்னிட்டு இன்று முதல் வரும் 30 ஆம் தேதி வரை 5 முதல் 10 சதவிகிதம் சிறப்பு சலுகை வழங்கப்படுவதாகவும் இதனை பொதுமக்கள் நன்கு பயன்படுத்திக் கொண்டு வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்கள் கைவினைஞர்கள் சங்கத்தினருக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று சேலம் மாவட்ட வெள்ளி கொலுசு உற்பத்தியாளர் கைவினைஞர்கள் நல சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஸ்ரீ ஆனந்தராஜன் கேட்டுக்கொண்டார். 
ஸ்ரீ சாஜ் வெள்ளி விழா மாளிகை திறப்பு விழாவிற்கான ஏற்பாடுகளை சேலம் மாவட்ட வெள்ளி கொலுசு உற்பத்தியாளர் கைவினைஞர்கள் நலச் சங்கத்தினர் சிறப்பாக செய்திருந்தனர். 

இந்த திறப்பு விழாவில் அந்த சங்கத்தின் நிர்வாகிகள்,  தொழிலதிபர்கள், வியாபாரிகள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: