புதன், 26 ஜூன், 2024

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 7,781 கன அடியாக அதிகரிப்பு

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக இருக்கும் பவானிசாகர் 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்டது. இந்த அணை மூலம் கீழ்பவானி வாய்க்கால், தடப்பள்ளி- அரக்கன்கோட்டை மற்றும் காலிங்கராயன் வாய்க்கால் வழியாக சுமார் 2.30 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதியும், மாயாறும் உள்ளன.
இந்த நிலையில், கடந்த 2 நாட்களாக நீலகிரி மலைப்பகுதியில் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. நேற்று (ஜூன்.26) புதன்கிழமை காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 936 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று (ஜூன்.27) வியாழக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 7,781 கன அடியாக அதிகரித்தது.

அதேபோல், அணையின் நீர்மட்டம் நேற்று காலை 58.93 அடியாக இருந்த நிலையில், இன்று காலை 60.24 அடியாக உயர்ந்தது. அப்போது, நீர் இருப்பு 7.33 டிஎம்சியாக இருந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில் வினாடிக்கு 200 கன அடி நீரும், கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 5 கன அடி நீரும் என மொத்தம் வினாடிக்கு 205 கன அடி வெளியேற்றப்பட்டு வருகிறது.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: