புதன், 26 ஜூன், 2024

சத்தி அருகே வீட்டில் 8.5 கிலோ சந்தன மரக்கட்டை பதுக்கிய முதியவர் கைது

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனச்சரகம் கெம்பநாயக்கன்பாளையம் காவல் சுற்றுக்கு உட்பட்ட கே.என்.பாளையம் நரசாபுரத்தில் சட்டவிரோதமாக வீட்டில் சந்தன மரக்கட்டை வைத்திருப்பதாக சத்தியமங்கலம் வனத்துறையினருக்கு நேற்று (25ம் தேதி) தகவல் கிடைத்தது.
அதன்பேரில், சத்தியமங்கலம் வனச்சரக அலுவலர் தலைமையிலான குழுவினர் மற்றும் பங்களாப்புதூர் போலீசார் அங்கு ரோந்து சென்று, அங்கு கருப்பணன் மகன் பெருமாள் என்ற கட்டபெருமாள் (வயது 64) என்பவரது வீட்டில் சோதனை நடத்தினர்.

அப்போது, வீட்டில் 8.5 கிலோ எடை கொண்ட சந்தன மரக்கட்டை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, பெருமாளை போலீசார் பிடித்து, சந்தனகட்டையுடன் அவரை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

பெருமாளிடம் வனத்துறையினர் சந்தன மரம் எங்கு வெட்டப்பட்டது. எந்தெந்த பகுதிகளில் சந்தன மரக்கட்டைகள் வெட்டப்படுகிறது. எங்கெல்லாம் சந்தன மரம் விற்பனை நடக்கிறது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தினர்.

பின்னர், பெருமாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய வனத்துறையினர், நீதிமன்ற காவலில் வைத்துள்ளனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: