வெள்ளி, 21 ஜூன், 2024

ஈரோட்டில் சத்துணவு ஊழியர்கள் தர்ணா போராட்டம்

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேர்தல் கால வாக்குறுதிகளான காலமுறை ஊதியம், வரையறுக்கப்பட்ட ஊதியம், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற தர்ணாவிற்கு மாவட்ட செயலாளர் எம்.கண்ணன் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ச.விஜயமனோகரன் போராட்டத்தைத் தொடங்கி வைத்து உரையாற்றினார். 

ஒருங்கிணைந்த இந்தியமுறை மருத்துவமனை பணியாளர் சங்க மாநில செயலளார் எம்.சந்திரமௌலி, வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.ரமேஷ் ஆகியோர் வாழ்த்தி பேசினர். திரளான சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்ட போராட்டத்தின் இறுதியாக சங்கத்தின் மாவட்ட துணை தலைவர் பி.விஜயன் நன்றி கூறினார்.
படம் உள்ள

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: