செவ்வாய், 11 ஜூன், 2024

JEE ADVANCED தேர்வில் சாதனை படைத்த ஸ்ரீ சைதன்யா பள்ளி மாணவ மாணவிகளுக்கு பாராட்டு..

சேலம்.
S.K. சுரேஷ்பாபு. 

JEE ADVANCED தேர்வின் பொது பிரிவில் முதல் 10 இடங்களை பிடித்து மாணவ மாணவிகள் சாதனை. ஸ்ரீ சைதன்யா பள்ளியில் சாதனையாளர்களுக்கு பாராட்டு விழா. 
    
தேசிய தேர்வு முகமை ( NTA) JEE - ADVACED 2024 தேர்வு முடிவை 9.6.2024 அன்று வெளியிட்டுள்ளது. இந்த தேர்வில் ஸ்ரீ சைதன்யா பள்ளி மாணவர்கள் இமாலய சாதனையை செய்துள்ளனர். JEE ADVANCED தேர்வின் பொது பிரிவில் முதல் 10 இடங்களை ஸ்ரீ சைதன்யா மாணவர்களே பெற்றுள்ளனர். அதன்படி ராகவ் ஷர்மா இந்த தேர்வில் தேசிய அளவில் முதல் இடத்தை பெற்றுள்ளார். மேலும் சேலம் ஸ்ரீ சைதன்யா பள்ளியில் தேசிய அளவில் அபிநவ் 15வது ரேங்க், திலீப் குமார் 508வது ரேங்க், நிதின் 606வது ரேங்க், பெற்று மாணவர்கள் சாதனை புரிந்து IIT கல்லூரியில் சேர்வதற்கு தகுதி பெற்றுள்ளனர்.
JEE ADVANCED நீங்க அரிய சாதனையால் மாணவர்கள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகத்தினர் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளது. 
JEE ADVANCED 2024ல் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் ஸ்ரீ சைதன்யா கல்வி நிறுவனங்களின் தலைவர் திருமதி சுஷ்மா பொப்பண்ணா, செயல்பாட்டு தலைவர் ஹரிபாபு, துணை செயல்பாட்டு தலைவர் கிருஷ்ண ரெட்டி, பள்ளியின் டீன் திருமதி பூர்ணா ராவ், முதல்வர்கள் டாக்டர் தனசேகரன் மற்றும் மாலதி ராஜா, துணை முதல்வர் ஸ்ரீதர் மற்றும் கலைமணி ஆகியோர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். மேலும் JEE ADVANCED தரவரிசை பட்டியலில் சிறந்த இடத்தை பெற்றுள்ள மாணவர்களுக்கு  தங்களது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டனர்.
இது குறித்து சாதனை படைத்த மாணவ மாணவிகள் கூறுகையில், தேசிய அளவில் வெளியிடப்பட்ட தரவரிசை பட்டியலில் முதல் 10 இடங்களை பிடித்து ஸ்ரீ சைதன்யா மாணாக்கர்களாகிய நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாகவும் பெருமைப்படுவதாகவும் தெரிவித்த அவர்கள், சாதனை படைக்க உறுதுணையாக இருந்து பள்ளி நிர்வாகத்தினருக்கும் பள்ளி ஆசிரியர் பெருமக்களுக்கும் தங்களது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கூறினர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: