வெள்ளி, 6 செப்டம்பர், 2024

சேலத்தில் அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தில் பூவுலகின் மேல் ஸ்ரீ சிவசக்தி கணபதி அலங்காரம்.....

 சேலம்,
S.K. சுரேஷ்பாபு.

சேலத்தில் அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தில் பூவுலகின் மேல் ஸ்ரீ சிவசக்தி கணபதி அலங்காரம்.....வின்னுலக்தில் விநாயக பெருமான் தனது தாய் தந்தையருடன் நடனம் ஆடுவது  போல தத்ருபமாக அமைக்கப்பட்டு இருந்த அலங்காரம்  பக்தர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது... ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசனம்.....

இந்துக்களின் முக்கிய பண்டிகைளில் ஒன்று விநாயகர் சதுர்த்தி, இந்த பண்டிகை உலகம் முழுவதும் உள்ள அணைத்து இந்துக்களும் மிகச்சிறப்பாக கொண்டாடி வருகின்றனர் குறிப்பாக வட மாநிலத்தில் விநாயகர் சதுர்த்தி பத்து நாட்களுக்கு மிகச்சிறப்பாக கொண்டாடி மகிழ்கின்றனர், தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி மூன்று நாட்கள் கொண்டாடப்படுகிறது, சேலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலை வைத்து உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில் சேலம் செவ்வாய் பேட்டை பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது, எலைட் அசோசியேஷன் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 40  ஆண்டுகளுக்கு மேலாக கொண்டாடி வருகின்றனர், ஒவொரு ஆண்டும் பல்வேறு வடிவங்களில் புராண இதிகாசங்கள் உணர்த்தும் வகையில் விநாயகர் சிலை அமைக்கபட்டு கொண்டாடி வருகின்றனர் குறிப்பகாக கைலாச கணபதி, செல்வகணபதி கண்ணாடி கணபதி, சங்கு கணபதி, பனிலிங்க கணபதி என பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலையை பல லட்ச ருபாய் மதிப்பில் அமைக்கபட்டு பக்தர்களின் தரிசனத்திற்காக மூன்று நாட்கள் வைக்கபடுகிறது, அதே போல இந்த ஆண்டும் 44ம் ஆண்டை முன்னிட்டு, இந்த பிரபச்சத்தில் தலைவனான சூரிய பகவானை சுற்றி நவகிரகங்கள் கோள்களாக இருக்கின்றன. இந்த கோள்களில் மனிதர்கள் மற்றும் பல்வேறு உயிரினங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் பூவுலகும் ஒன்று. நமது பூவுலகமானது வெப்பமானதால் இயற்கை பேரிடர் உலகம் முழுவதும் நடந்து கொண்டிருக்கிறது.  ஆகையால் அனைத்து தேவர்களும் முனிவர்களும் சேர்ந்து கோள்களின் தலைவனாகிய விநாயகப் பெருமானே அணுகி அவர் அனைத்து கோள்களையும் சாந்தப்படுத்தும் வகையில் விநாயகர் தனது பிறந்தநாளில் விண்ணுலகில் பூவுலகின் மேல் தனது தாய் தந்தையுடன் சேர்ந்து நடனமாடி அனைத்து கோள்களையும் சாந்தப்படுத்தி பூமியை வெப்பமயமாக்குதலில் இருந்து தடுத்து பூமியில் உள்ள மக்களை பேரிடர்களில் இருந்து காப்பாற்ற வேண்டி இந்த செயலை நினைவு கூறும் வகையில் மிகவும் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டிருந்தது. சேலம் செவ்வாய்பேட்டை எலைட் அசோசியேஷன் சார்பில் இன்று மாலை பூவுலகின் மேல் ஸ்ரீ சிவசக்தி விநாயகர் தாய் தந்தையுடன் நடனமாடும் சிலை சிறப்பு பூஜை செய்யப்பட்டு பொதுமக்களின் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இன்னும் மூன்று நாட்கள் நடைபெற இந்த சிறப்பு தரிசனத்தை பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு விநாயகப் பெருமானின் அருள் பெற வேண்டுமாய் அந்த சங்கத்தின் செயலாளர் சுவாதி சேகர் கேட்டுக் கொண்டுள்ளார் 
ஆண்டுதோறும் ஒவ்வொரு தலைப்பில் மிக தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு பொதுமக்களின் பார்வைக்காக திறந்து விடப்படும் இது போன்ற நிகழ்வு அந்த பகுதி மக்கள் இடையே மட்டுமல்லாமல் சேரமானவரின் பெரும்பாலான பகுதி மக்களின் வரவேற்பை பெற்றுள்ளது என்பது மட்டும் நிதர்சனமான உண்மை. 

சுவாதி சேகர் பேட்டி உள்ளது....

இதுகுறித்து நிகழ்ச்சி அமைப்பாளர் சேகர் கூறும்போது கடந்த மூப்பதி ஏழாம் ஆண்டு  விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடி வருகிறோம் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு இதிகாசங்கள் உணர்த்தும் வகையில் விநாயகர் சிலை அமைக்கபடும் அதே போல இந்த ஆண்டும் அமைச்சர்கள் முனிவர்கள் நடுவே ராஜ தர்பார் ஆட்சி செய்வது போல கணபதி அமர்திருபப்து போன்று ராஜாவிடம் யார் கேட்டாலும் குறைவில்லாமல் செய்திருந்தது விண்ணுலகில் நடப்பது போலவே அமைந்திருந்தது. மேலும் வினாயகரே அமைச்சர்களும், முனிவர்களும் போல அமர்ந்திருந்து ஆட்சி புரிவது மண்ணுலகில் அமைந்தது எங்களுக்கு மிகப்பெரிய பாக்கியமாக் உள்ளது என்றும் செல்வங்களை வழங்கக்கூடிய விநாயகரை குறிப்பாக ராஜா வேடத்தில் அமர்ந்திருந்து வேண்டிய செல்வங்களை வழங்க கூடிய ராஜாவாக உள்ள கணபதியை பக்தர்கள் கண்டு தரிசனம் பெற்று செல்ல வேண்டும் என கேட்டுகொண்டார்.



শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: