சனி, 21 செப்டம்பர், 2024

புரட்டாசி முதல் சனிக்கிழமை. சேலம் பெரிய புதூர் ஸ்ரீ வெங்கடேச பெருமாள் ஆசிரமத்தில் மூலவருக்கு தங்க கவசம்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

புரட்டாசி முதல் சனிக்கிழமை. சேலம் பெரிய புதூர் ஸ்ரீ வெங்கடேச பெருமாள் ஆசிரமத்தில் மூலவருக்கு தங்க கவசம். 

தமிழ் மாதங்களில் வரும் புரட்டாசி மாதம் திருவேங்கடமுடையானுக்கு உகந்த மாதம் ஆக கருதப்படுகிறது. இதனை ஒட்டி தமிழ் மாதங்களில் புரட்டாசி முதல் சனிக்கிழமை ஆனது என்று சேலம் அருகே உள்ள பெரிய புதூர் ஸ்ரீ பாலாஜி டிரஸ்ட் வெங்கடேச பெருமாள் ஆலயத்தில் புரட்டாசி முதல் வார சிறப்பு பூஜைகள் பக்த கோடிகள் ஆசீர்வாதத்துடன் வெகு விமர்சையாக நடைபெற்றது. 
முதல் சனிக்கிழமையை  ஒட்டி ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வெங்கடேச பெருமாள் உற்சவருக்கு மங்களப் பொருட்களைக் கொண்டு அதிகாலை முதலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து மூலவருக்கு தங்க கவசம் சாத்தப்பட்டு பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு எம்பெருமான் வெங்கடேச பெருமாள் தங்க கவசத்துடன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து மகா தீபாராதனைகள் நடைபெற்றன. இந்த புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை சிறப்பு பூஜையில் பெரிய புதூர் சின்ன புதூர் அழகாபுரம் நான்கு ரோடு 5 ரோடு உள்ளிட்ட சேலம் மாநகரின் முக்கிய பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் திருக்கோவிலில் சுவாமி தரிசனம் மேற்கொண்டனர்.
இது குறித்து திருக்கோவில் அறக்கட்டளை தலைவர் கூறுகையில் இரண்டாவது வாரம் சிறப்பு அலங்காரமும், மூன்றாவது வாரம் திருவேங்கடமுடியானுக்கு வைரமுடி தரிசனமும், நான்காவது வாரம் சிறப்பு அலங்காரம் அதை தொடர்ந்து ஐந்தாவது வாரம் கருட வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெற உள்ளதாகவும், இந்த விழாக்களில் பக்த கோடிகள் கலந்து கொண்டு பயன் பெற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். சேலம் பெரிய புதூர் ஸ்ரீ பாலாஜி டிரஸ்ட் வெங்கடேச பெருமாள் ஆலயத்தில் நடைபெற்ற இந்த முதல் சனிவார பூஜையில் டிரஸ்ட் நிர்வாகிகள், சிறப்பாக செய்திருந்தனர்.


শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: