வியாழன், 28 நவம்பர், 2024

முதல்வர் ஸ்டாலின் டிச.19, 20ல் ஈரோடு வருகை: விழா மேடை அமைக்கும் இடத்தில் அமைச்சர் ஆய்வு

முதல்வர் ஸ்டாலின் டிச.19, 20ல் ஈரோடு வருகை: விழா மேடை அமைக்கும் இடத்தில் அமைச்சர் ஆய்வு
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடுத்த மாதம் டிசம்பர் 19 மற்றும் 20ம் தேதிகளில் ஈரோடு மாவட்டத்துக்கு வருகை தருகிறார். அரசு நிகழ்ச்சியில் பங்கேற்கும் அவர் அரசின் திட்டங்களை கள ஆய்வு செய்து, மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். தி.மு.க நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டத்திலும் பங்கேற்க உள்ளார்.
இந்த நிலையில், முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்காக சோலார் புதிய பேருந்து நிலையம் அருகே விழா அமைக்கும் இடத்தில் தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி, மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர், வடக்கு மாவட்ட திமுக செயலாளர் நல்லசிவம் மற்றும் அதிகாரிகள் குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இதில், பொதுமக்கள், பயனாளிகள், வாகன நிறுத்தம், அடிப்படை டை வசதிகள், முதல்வர் வந்து செல்வது தொடர்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி ஆலோசிக்கப்பட்டது.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: