புதன், 6 நவம்பர், 2024

சேலம் கருமாபுரத்தில் அரசு விதி முறைகளுக்கு மாறாக 2 லட்சம் சதுர அடியில் கட்டப்பட்டுள்ள பாரகன் பாலிமர் நிறுவன கட்டிடங்களை அகற்ற வேண்டும். இந்த ஊழலுக்கு துணை போன வட்டார வளர்ச்சி அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழு சேலம் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு ஊராட்சி ஒன்றிய இயக்குனருக்கு கோரிக்கை.

சேலம். 
S.K. சுரேஷ் பாபு. 

சேலம் கருமாபுரத்தில் அரசு விதி முறைகளுக்கு மாறாக 2 லட்சம் சதுர அடியில் கட்டப்பட்டுள்ள பாரகன் பாலிமர் நிறுவன கட்டிடங்களை அகற்ற வேண்டும். இந்த ஊழலுக்கு துணை போன வட்டார வளர்ச்சி அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழு சேலம் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு ஊராட்சி ஒன்றிய இயக்குனருக்கு கோரிக்கை. 

தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழுவின் சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழ்நாடு ஊராட்சி ஒன்றிய இயக்குனர் ஆகியோர்களுக்கு கோரிக்கையாக புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனு குறித்து தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழு ஒருங்கிணைப்பாளர் சரசுஸ்ராம் ரவி செய்தியாளர்களிடம் கூறுகையில், சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டினம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கருமாபுரம் பகுதியில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பேரகன் பாலிமர் நிறுவனத்திற்கு சொந்தமாக இயங்கி வரும் நிறுவனத்தின் 2 வரைபடங்களுக்கு மாறாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் குறித்து, அதே பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசு என்பவர் இரண்டு முறை புகார் மனு அளித்துள்ளதாகவும்,  சம்பந்தப்பட்ட புகார் மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை இதுவரை எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்காமல் விசாரணைக்கு ஏற்றவாறு சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அதிகாரியும் அந்த துறையை சார்ந்த மற்ற அதிகாரிகளும் தவறான மற்றும் பொய்யான தகவல்களை மனுதாரருக்கு கொடுத்ததோடு மட்டுமல்லாமல் உள்ளபடி DDCP அப்ரூவல் என்பது குறைந்தபட்சம் அந்த கிராமப்புறத்தில் அந்த ஊராட்சி பகுதியில் குறைந்தபட்சம் 2000 சதுர அடிக்கு மேல் அனுமதி வழங்க அவர்களுக்கு அனுமதி இல்லை. ஆனால் முறைகேடாக சம்பந்தப்பட்ட பாரகன் பாலிமர் நிறுவனத்திற்கு 2 லட்சம் சதுர அடி நிலத்திற்கு முறைகேடாக அனுமதி வழங்கியதாக கூறப்படுகிறது. 
அதற்காக பல கோடி ரூபாய் ஊழலாக வட்டார வளர்ச்சி நிர்வாகத்திற்கு வழங்கப்பட்டு தொடர்ந்து சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம் வரி எய்பு செய்ததோடு மட்டுமல்லாமல் தமிழக அரசுக்கு வரி இழப்பு ஏற்படுத்தி உள்ளது. வட்டார வளர்ச்சி அதிகாரி திருவேங்கடம் என்பவர் தன்னிச்சையாக  வரைமுறைக்கு மாறாக அதிகமாக கொடுத்துள்ளதாக மனுதாரர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்ட போது பொய்யான தகவல்கள் கொடுத்துள்ளார். இந்த பொய்யான தகவல்கள் குறித்து நேற்று சேலம் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவை சென்னை விஜிலென்ஸ் துறைக்கும் அனுப்பப்பட்டுள்ளது. மனுதாரரின் இந்த கோரிக்கையை ஏற்று மாவட்ட நிர்வாகம் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் முறையான விசாரணை மேற்கொண்டு அங்கு கட்டப்பட்டுள்ள விதிமுறைகளுக்கு மாறான கட்டிடங்களை அப்புறப்படுத்தி வரைபட உத்தரவை அமல்படுத்தி வரைபடத்திற்கு மாறாக இரண்டு லட்சம் சதுர அடியில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை அகற்ற வேண்டும் என்றும் கூட்டுநடவடிக்கை குழு சார்பாக வலியுறுத்துவதாகவும் அதுமட்டுமல்லாமல் முறைகேடாகவும் அரசுக்கு எதிராகவும் செயல்பட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சம்பந்தப்பட்ட மனுதாரர் அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் தமிழ்நாடு கூட்டு நடவடிக்கையை குழுவின் எதிர்பார்ப்பாக உள்ளது என்று அதன் ஒருங்கிணைப்பாளர் சரஸ்ராம் ரவி தெரிவித்துள்ளார்.


শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: