சனி, 23 நவம்பர், 2024

சேலத்தில் 26 ஆம் ஆண்டு மீலாது விழா....1000 கிலோ பிரியாணி மற்றும் இனிப்பு வகைகள் 3000க்கும் மேற்பட்டவர்களுக்கு தப்ரூக் வழங்கப்பட்டது.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

சேலத்தில் 26 ஆம் ஆண்டு மீலாது விழா....1000 கிலோ பிரியாணி மற்றும் இனிப்பு வகைகள் 3000க்கும் மேற்பட்டவர்களுக்கு தப்ரூக் வழங்கப்பட்டது. 

சேலம் பார்க் தெரு மீலாது விழா கமிட்டி சார்பில் இந்த உலகில் மக்களுக்கு அருள் நெறியோடு முன்மாதிரியாக வாழ்ந்து காட்டி வாழ்க்கை நெறிமுறைகளை வகுத்துத் தந்த ஏந்தல் நபிகள் நாயகம் அவர்களின் பிறந்தநாள் விழா வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இதற்காக 1000 கிலோ உணவுப்பொருட்களை கொண்டு சுமார் 20 பெரிய அளவிலான டபராக்களில் பிரியாணி சமைக்கப்பட்டது. மேலும் சுமார் 3000 நபர்களுக்கு இனிப்புகளும் தயார் செய்யப்பட்டன. 
சேலம் ஜாமியா மசூதி முத்தவல்லி எஸ் ஆர் அன்வர் ஷாகிப் தலைமையில் நடைபெற்ற விழாவில், சேலம் ஜாமியா மசூதியின் இமாம் மவுலவி காரிசு ஹேல் அகமது காசிமி மற்றும் சேலம் கோட்டை இமாம் முகமது அப்பாஸ் காசிமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பு பயான் நடத்தினர்.
அதுமட்டுமில்லாமல் மீளாது விழா கமிட்டியினர் மற்றும் மற்றும் பார்க் தெரு மக்கள் நலச்சங்கம் ஆகியவற்றின் சார்பில் அரபிக் பயிலும் குழந்தைகள் மற்றும் அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்த 10,11, மற்றும் 12 பயிலும் மாணவ மாணவிகளுக்கு கல்வி ஊக்கத் தொகையும் வழங்கப்பட்டன. 
இதனைத் தொடர்ந்து இன்று காலை 6 மணி முதல் 1000 கிலோ அளவில் தயார் செய்யப்பட்ட பிரியாணி மற்றும் இனிப்பு வகைகளை இஸ்லாமியர்கள் உட்பட அனைத்து சமுதாய மக்களுக்கும் என சுமார் 3,000 மேற்பட்டோருக்கு தப்ரூக் எனப்படும் அன்னதானம் வழங்கப்பட்டது. 
இந்த நிகழ்வுகளின் போது மீலாது விழா கமிட்டியின் தலைவர் அப்துல் சுபான், செயலாளர் முகமது ஷபி, பொருளாளர் சர்தார், துணைத் தலைவர் சர்தார் ஹுசைன், 31வது கோட்டை மாமன்ற உறுப்பினர் சையது மூஸா 31வது கோட்டை திமுக செயலாளர் சையது இப்ராஹீம் மற்றும் 31 வது கோட்டை காங்கிரஸ் பிரமுகர் குமரேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: