குழந்தைகள் மத்தியில் ஆண்ட்ராய்டு செல்போன்களின் பயன்பாட்டை குறைக்க வலியுறுத்தி ஆயிரத்துக்கும் மேற்பட்ட மழலைகள் பங்கேற்ற மாரத்தான் போட்டி ..!
குழந்தைகளுக்கான மாரத்தான் போட்டியில் பெற்றோர்களும் சேர்ந்து ஓடியதால் பார்ப்போர் அனைவரையும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
குழந்தைகளுக்கான மாரத்தான் போட்டி ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்ற நிலையில் குழந்தைகளை வெற்றி பெற வைக்க பெற்றோர்களும் இணைந்து ஓடினர்.
ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே உள்ள டெக்ஸ்வேலியில், செலிப்ரேட்டெக்ஸ் அமைப்பின் சார்பில் குழந்தைகளுக்கான மாரத்தான் போட்டி நடைபெற்றது. பல்வேறு பள்ளிகளில் பயிலும் குழந்தைகள் ஆண்ட்ராய்டு செல்போன்களின் பயன்பாட்டை குறைக்கவும், பாரம்பரிய விளையாட்டுகளில் குழந்தைகளை ஈடுபடுத்த்தில் ஊக்குவிக்கும் வகையில்,
2 முதல் 5 வயது குழந்தைகள் 500 மீட்டர் தொலைவும், 6 முதல் 10 வயது வரை 800 மீட்டர் தொலைவில், இறுதியாக 11 வயது முதல் 15 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 1 கிலோ மீட்டர் என பிரிவிற்கு ஏற்றார் போல் மாரத்தான் போட்டி நடைபெற்றது.
போட்டியானது டெக்ஸ்வேலி வளாகத்தில் தொடங்கி ஈரோடு கோவை செல்லும் நெடுஞ்சாலை வரை சென்று திரும்பினர்,
போட்டியில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு, பதக்கங்களும் சான்றிதழ்களையும் கோப்பைகளையும் வழங்கினார். போட்டியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்ற நிலையில், 2 முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளை வெற்றி பெற வைப்பதற்காக பெற்றோர்களும் இணைந்து ஓடியது அனைவரையும் ஆரவாரப்படுத்தியது.
0 coment rios: