சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதல் படி இன்று
வீரபாண்டி ஒன்றியத்திற்க்கு உட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் நடைபெற்று வரும் வாக்காளர் சேர்த்தல் நீக்கல் சரிபார்ப்பு சிறப்பு முகாமினை வீரபாண்டி ஒன்றிய திமுக செயலாளர் வெண்ணிலா சேகர் பார்வையிட்டு ஆய்வு.
இந்திய தேர்தல் ஆணையத்தின் சார்பாக நவம்பர் மாதம் 16 17 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் வாக்காளர்களுக்கான சிறப்பு முகாம் நடைபெறும் என்றும், இந்த முகாமில் வாக்காளர்கள் கலந்து கொண்டு பெயர் மாற்றம் இடம் மாற்றம், பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து தீர்த்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு அறிவித்து இருந்தது.
அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் நடைபெறும் இந்த சிறப்பு முகாமினை பயன்படுத்தி வாக்காளர்கள் அனைவரும் பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.
இதன் ஒரு பகுதியாக சேலம் மாநகரம் உட்பட மாவட்டம் முழுவதும் வாக்காளர்களுக்கான சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் தளபதி அவர்களின் ஆணைக்கிணங்க இன்று நடைபெற்று வரும் வாக்காளர் பெயர் சேர்த்தல் நீக்கல் திருத்தம் சிறப்பு முகாமில் வீரபாண்டி
ஒன்றியத்திற்கு உட்பட்ட பூலாவரி ஊராட்சி வாக்கு சாவடி மையங்களில் உள்ள BLA-2 பணிகளை, வீரபாண்டி ஒன்றிய கழக செயலாளர் திருமதி.S.வெண்ணிலாசேகர் அவர்கள் பார்வையிட்டு ஆலோசணை வழங்கினார்.
0 coment rios: