அல் அமீன் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் ஈரோடு மாவட்டத்தில் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நடும் பணிக்கான துவக்க விழா நடைபெற்றது.
ஈரோடு அல் அமீன் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் ஈரோடு பெரிய அக்ரஹாரம் பகுதியில் மரக்கன்றுகளை நடும் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
அல் அமீன் பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் அப்துல்லா தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், அல் அமீன் பொறியியல் கல்லூரியின் முதல்வர் சுபையர், அல் அமீன் சங்கத்தின் தலைவர் பாரத் பிரஸ் சாகுல் ஹமீது, ஹஜரத் ஹபீப் முஹம்மத், அக்ரஹாரம் பகுதி முன்னாள் தலைவர் பேக் சேட், அல் அமீன் பள்ளியின் தாளாளர் ஆடிட்டர் அயூப், அல் அமீன் சங்கத்தின் செயலாளர் இப்ராஹிம் சாஜித், பள்ளப்பட்டி கவுன்சிலரும், அல் அமீன் பள்ளி முன்னாள் மாணவர் சங்கத்தின் உறுப்பினருமான ஷாகுல் ஹமித் உட்பட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் நிர்வாகிகள், மனிதநேய மக்கள் கட்சியின் நிர்வாகிகள், எஸ்டிபிஐ கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தாவுதியா அரபிக் கல்லூரியின் பேராசிரியர்கள், மாணவர்கள், உலமாக்கள், அல் அமீன் பள்ளியின் மாணவ மாணவிகள் என ஏராளமானோர் பங்கேற்றனர்,
பங்கேற்ற சிறப்பு விருந்தினர்கள், பொதுமக்கள் மத்தியில் மரங்களின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியவாறு பல்வேறு கருத்துக்களை எடுத்துரைத்தனர்,
0 coment rios: