செவ்வாய், 24 டிசம்பர், 2024

ஈரோட்டில் 10.5 சதவீத இடஒதுக்கீட்டை வழங்காத தமிழக அரசை கண்டித்து பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்

வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என பா.ம.க. சார்பில் இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தலைவர் டாகடர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் ஆலோசனைப்படி வன்னியர்களுக்கான கல்வி, வேலை வாய்ப்பில் 10.5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு, உச்ச நீதிமன்றம் தரவுகளின் அடிப்படையில் வழங்கலாம் என தீர்ப்பு வழங்கி 1000 நாட்களாகியும் இந்நாள் வரை உள் இட ஒதுக்கீட வழங்காததை கண்டித்து பெரியார் நினைவு நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) ஈரோடு மாநகர் மாவட்ட பா.ம.க. சார்பில் எஸ்.ஆர்.ராஜூ தலைமையில் ஈரோடு வீரப்பன்சத்திரம் பேருந்து நிறுத்தத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வன்னியர்களுக்கு தொடர்ந்து துரோகம் அழித்துவரும் திமுக அரசின் மெத்தன போக்கை கைவிட வேண்டும் என்றும், இதே போல் தொடர்ந்து 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை அமுல்படுத்தாவிட்டால் மாபெரும் போராட்டங்கள் வாயிலாக பெற வேண்டிய சூழல் ஏற்படும் என்று வலியுறுத்தி கோசங்களை எழுப்பினர். 

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் பிரபு,மாவட்ட பொருளாளர் அய்யம்மாள், மாநிலத் துணைத் தலைவர்கள் எஸ் எல் பரமசிவம் எம்பி வெங்கடாசலம் மாநில சிறுபான்மை பிரிவு செயலாளர் ஷேக் மொய்தீன்,வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் செல்வராஜ் மாவட்ட தலைவர் பெருமாள் இளைஞர் சங்க செயலாளர் தம்பிதுரை தலைவர் தினேஷ் குமார், மாவட்ட மகளிர் அணி தலைவி முத்துலட்சுமி,மாவட்டத் துணைச் செயலாளர்கள் முருகன், மூர்த்தி செவன் அப் செல்வராஜ், கணேசன்,மாவட்ட அமைப்பு செயலாளர் இந்த ராஜேந்திரன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மணிகண்டன் உள்ளிட்ட ஏராளமனோர் இதில் கலந்து கொண்டனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: