ஈரோடு பன்னீா்செல்வம் பூங்காவில் ஒன்று கூடி வண்ண வண்ண பலூன்களை பறக்க விட்டு, ஒருவரை ஒருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான மக்கள்.
புத்தாண்டையொட்டி, ஈரோடு பிரப் நினைவு சி.எஸ்.ஐ. தேவாலயத்தில், சிறப்பு ஆராதனை உட்பட வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது, இங்கு 2025 ஆண்டு பிறப்பதைக் குறிக்கும் வகையில் வண்ண மின் விளக்குகளால் ஆண்டு ஒளிரச் செய்யப்பட்டது.
இதைக் காண இளைஞா்கள், இளம்பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கானோா் பன்னீா்செல்வம் பூங்காவில் கூடி வண்ண வண்ண பலூன்களை பறக்க விட்டு, ஒருவரை ஒருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
புத்தாண்டையொட்டி, ஈரோடு பிரப் நினைவு சி.எஸ்.ஐ. தேவாலயத்தில், சிறப்பு ஆராதனை உட்பட வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது, இங்கு 2025 ஆண்டு பிறப்பதைக் குறிக்கும் வகையில் வண்ண மின் விளக்குகளால் ஆண்டு ஒளிரச் செய்யப்பட்டது.
மிக சரியாக நள்ளிரவு 12 மணிக்கு 2024 என்பது மறைந்து 2025 என்று ஆலய கோபுர திரையில் விளக்குகள் ஒளிா்ந்தன. இதைக் காண இளைஞா்கள், இளம்பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கானோா் பன்னீா்செல்வம் பூங்காவில் கூடி, பொதுமக்கள் கொண்டு வந்த வண்ண வண்ண பலூன்களை பறக்க விட்டு மிகுந்த உற்சாகத்துடன் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
புத்தாண்டு பிறந்ததும் இளைஞா்கள், இளம்பெண்கள் உற்சாகக் குரல் எழுப்பி, கேக்குகள் வெட்டி கொண்டாடினா். பட்டாசு, வான வேடிக்கைகள் வெடிக்கப்பட்டன. நகரில் பல பகுதிகளிலும் இளைஞா்கள் இருசக்கர வாகனத்தில் ஊா்வலமாகச் சென்று புத்தாண்டு வாழ்த்துகளைப் பொதுமக்களுக்கு கூறி மகிழ்ந்தனா். ஈரோடு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜவகர் தலைமையில் மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
ஈரோட்டில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் இன்று இரவு சிறப்பு பிராா்த்தனைகள் நடைபெற்று வருகின்றன. ஈரோடு ஸ்டேட் வங்கி சாலையில் உள்ள புனித அமல அன்னை ஆலயத்தில் இரவு 11.30 மணிக்கு புத்தாண்டு ஆராதனை தொடங்கியது. நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறப்பு கொண்டாட்டம், நன்றி திருப்பலி (பூஜை) நடைபெற்றது. சி.எஸ்.ஐ. பிரப் தேவாலயத்தில் 11 நன்றி பிராா்த்தனை நடைபெற தொடங்கியது. தொடா்ந்து நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு சிறப்பு ஆராதனை செய்யப்பட்டது.
ரயில்வே காலனி திரு இருதய ஆண்டவா் ஆலயம், பன்னீா்செல்வம் பூங்கா தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை உயிா்த்தெழுந்த நாதா் ஆலயம் உள்ளிட்ட பல்வேறு கிறிஸ்தவ ஆலயங்களில் நள்ளிரவு பிராா்த்தனை நடைபெற்று வருகிறது.
இதேபோல், ஈரோட்டில் உள்ள பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது.
0 coment rios: