செவ்வாய், 3 டிசம்பர், 2024

சேலம் கொண்டலாம்பட்டி அருகே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரை உடைந்ததை திருமணிமுத்தாற்றுப் பாசன விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் கொண்டலாம்பட்டி தங்கராஜ்....பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து ரயில் ரோடு வரை சுமார் 500 மீட்டர் வரை தடுப்பு சுவர் எழுப்பி கொடுத்து நிரந்தரமாக தீர்வு காண நடவடிக்கை எடுக்க என்றும் தமிழக முதலமைச்சருக்கு கோரிக்கை


சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

சேலம் கொண்டலாம்பட்டி அருகே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரை உடைந்ததை திருமணிமுத்தாற்றுப் பாசன விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு  தலைவர் கொண்டலாம்பட்டி தங்கராஜ்....பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து ரயில் ரோடு வரை சுமார் 500 மீட்டர் வரை தடுப்பு சுவர் எழுப்பி கொடுத்து நிரந்தரமாக தீர்வு காண நடவடிக்கை எடுக்க என்றும் தமிழக முதலமைச்சருக்கு கோரிக்கை

சேலம் திருமணிமுத்தாற்றில் இருந்து  வரும் மழைநீரானது ராஜ வாய்க்கால் ஜாரி கொண்டலாம்பட்டி வயக்காடு பாசனப்பகுதி வாய்க்கால்கரை நேற்று கனத்த மழை பெய்ததில் மழை நீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரை உடைந்ததை திருமணிமுத்தாற்றுப் பாசன விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு  தலைவர் கொண்டலாம்பட்டி தங்கராஜ் அவர்கள் சங்க நிர்வாகிகளுடன் நேற்று மாலை ஆய்வு செய்தார்.  ஏற்கனவே பாதிக்கப்பட்ட அந்த கரையை சுமார் 40 நாட்களுக்கு முன்பு எம்சன் மூட்டை போட்டு நீர் வளம் ஆதார அமைப்பு சார்பில் உடைந்த கரையை சரி செய்து கொடுக்கப்பட்டது மீண்டும் அதே இடத்தில் அதிக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு எம் சென்ட்மூட்டைகள் வெள்ளத்தால் தள்ளப்பட்டு விவசாய நிலங்களில் இரண்டு நாட்களாக தண்ணீர் சென்று கொண்டுள்ளது. மழை நீர் சூழ்ந்துள்ளதால்  சுமார் 60 ஏக்கருக்கு மேல் உள்ள பயிர்கள், கால்நடை தீவனங்கள் மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளது. 
இது சம்பந்தமாக நீர்வள ஆதாரம் அமைப்பு  அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளோம், அவர்கள் இன்றுநேரில் வந்து பார்வையிட்டு உடனடியாக சரி செய்து கொடுப்பதாக தெரிவித்துள்ளார்கள். மாண்பு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு இந்த வாய்க்கால் பாசன விவசாயிகள் சார்பில் கோரிக்கையாக இந்த பாதிக்கப்பட்ட பகுதியில் அடிக்கடி மழை வந்தால் கரை உடைவதால் பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து ரயில் ரோடு வரை சுமார் 500 மீட்டர் வரை தடுப்பு சுவர் எழுப்பி கொடுத்து நிரந்தரமாக தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டி விவசாயிகள் சார்பில் உள்ள கோரிக்கையை திருமணிமுத்தாறு பாசன விவசாயிகள்  சங்கங்கள் ஒருங்கிணைப்பு குழு தலைவர் கொண்டலாம்பட்டி  தங்கராஜ் அவர்கள் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்குபதிவு தபால் அனுப்பி வைக்கப்பட்டது.  ஆய்வின் போது ஜாரி கொண்டலாம்பட்டி கிளை துணைத் தலைவர் கந்தையன், துணைச செயலாளர் கருணாகரன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: