ஞாயிறு, 1 டிசம்பர், 2024

ஈரோட்டில் கழிவுகளை கொட்ட வந்த லாரியை சிறைபிடித்த பொதுமக்களால் பரபரப்பு

ஈரோடு மாநகரா ட்சிக்குட்பட்ட சூளை, பாரதிநகரில் 100-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள ஒரு காலி இட த்தில் கடந்த சில நாட்களாக ரசாயன கழிவுகள் மருத்துவ கழிவுகளை வாகனங்களில் வந்து சிலர் கொட்டி விட்டு செல்கின்றனர். இதுகுறித்து கலெக்டர் அலுவலகத்திலும், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடமும் இப்பகுதி மக்கள் ஏற்கனவே மனு அளித்திருந்தனர். 
இந்நிலையில் நேற்று இரவு ரசாயன கழிவுகளை ஏற்றி வந்த லாரி பாரதி நகர் பகுதியில் கழிவுகளை கொட்ட வந்துள்ளது. கழிவுகளை கொண்டு வந்த லாரி அங்குள்ள சேற்றில் சிக்கி நகர முடியாமல் இருந்துள்ளது. லாரியின் டிரைவர் எவ்வளவோ முயன்றும் லாரியை அங்கிருந்து நகற்ற முடிய வில்லை.

இதனைத் தொடர்ந்து, இன்று காலை அப்பகுதி மக்கள் அந்த வழியாக சென்றபோது லாரி ஒன்று சேற்றில் சிக்கிருப்பதை பார்த்து லாரி அருகே சென்று பார்த்தபோது லாரி க்குள் கழிவுகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அப்பகுதி மக்கள் திரண்ட வந்து அந்த லாரியை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் மற்றும் விஏஓ அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து போரா ட்டம் நடத்திய பொது மக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இனி இந்த பகுதியில் கழிவுகள் கொட்டாத அளவிற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் கூறினர். மேலும் அந்த லாரி டிரைவர் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: