சனி, 14 டிசம்பர், 2024

தமிழ்நாடு உழவர் பேரிய மாநாடு குறித்து சேலத்தில் பாமக கௌரவ தலைவர் ஜிகே மணி ஆலோசனை.....

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

தமிழ்நாடு உழவர் பேரிய மாநாடு குறித்து சேலத்தில் பாமக கௌரவ தலைவர் ஜிகே மணி ஆலோசனை.....

சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் சேலம் புதிய பஸ் நிலையம் சௌடாம்பிகா  ஓட்டலில் நடைபெற்றது. கட்சியின் கௌரவ தலைவர்  ஜி.கே மணி,அவர்கள் கலந்துகொண்டு 21- 12- 2024 அன்று திருவண்ணாமலை யில் நடைபெறும் தமிழ்நாடு உழவர் பேரிக்க மாநாடு குறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில,மாவட்ட,பகுதி ஒன்றிய, பேரூர், ஊராட்சி, கிளை, நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள்,  அனைவரிடமும் விவாதித்து ஆலோசனை வழங்கினார். 
இதில் மாநகர மாவட்ட செயலாளர்,இரா அருள் எம். எல்.ஏ, மேற்கு மாவட்டச் செயலாளர் சதாசிவம் எம்.எல். ஏ  மாநில வன்னியர் சங்க செயலாளர் மு கார்த்தி, மாநகர மாவட்ட தலைவர் கதிர் ராஜரத்தினம், வடக்கு மாவட்ட செயலாளர், நாராயணன் சேலம் தெற்கு மாவட்ட செயலாளர் செல்வகுமார், கிழக்கு மாவட்ட செயலாளர் ஜெயபிரகாஷ், மாவட்ட உழவர் பேரைக்க  தலைவர் செந்தில்,  மாவட்ட தலைவர்கள் டாக்டர் மாணிக்கம், பச்சமுத்து, சிவராமன், முத்துசாமி,மாநில செயற்குழு உறுப்பினர் கே.சி ஆறுமுகம்,மாநில தேர்தல் பணிக்குழு தலைவர் எம்
.பி சதாசிவம், மாநில செயற்குழு உறுப்பினர் அண்ணாதுரை, மாவட்ட அமைப்பு தலைவர்  வக்கீல் குமார், மாநில மாணவர் சங்க செயலாளர் விஜய் ராஜா, மற்றும் ஒருங்கிணைந்த மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: