திங்கள், 13 ஜனவரி, 2025

ஈரோடு கிழக்குத் தொகுதியில் வாகன சோதனை: கேரளா வியாபாரியிடம் இருந்து ரூ.1 லட்சம் பணம் பறிமுதல்

ஈரோடு கிழக்குத் தொகுதியில் நடந்த வாகன சோதனையில், கேரளா ஜவுளி வியாபாரியிடம் இருந்து ரூ.1 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் (பிப்ரவரி) 5ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. எனவே, அனைத்து பகுதிகளிலும் தேர்தல் முறைகேடுகளை தடுக்க தீவிர கண்காணிப்பு பணி நடந்து வருகிறது.

ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா உத்தரவின் பேரில், ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் மனிஷ் தலைமையில் தேர்தல் பிரிவு அதிகாரிகள் அனைத்து பணிகளையும் செய்து வருகிறார்கள்.

மேலும், போலீசாருடன், வருவாய்த்துறை அதிகாரிகள் இணைந்து கண்காணிப்பு படைகள். பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. பறக்கும் படை அதிகாரிகள் தொகுதி முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அதன்படி, இன்று (ஜன.13) அதிகாலை ஈரோடு கிழக்கு தொகுதி ஈரோடு மணிக்கூண்டு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது காரில் ரூ.1 லட்சம் பணம் இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து காரை ஓட்டி வந்த நபரிடம் விசாரணை நடத்திய போது அவர் கேரளா மாநிலம் மலப்புறம் பகுதியை சேர்ந்த ஜவுளி வியாபாரி முஸ்தபா என தெரியவந்தது.

மேலும், அவர் ஈரோடு மாவட்டத்தில் ஜவுளி வாங்க வந்திருப்பதாக கூறினார். எனினும் பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் ரூ.1 லட்சத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர் அந்த பணத்தை மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் உள்ள தேர்தல் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

ஏற்கனவே, அரசு ஒப்பந்ததாரரிடம் ரூ.1 லட்சம் பணமும், லேத் பட்டறை உரிமையாளரிடம் ரூ.1.80 லட்சமும், பெண் ஒருவரிடம் ரூ.50,860, பாமக கவுன்சிலரிடம் ரூ.1.22 லட்சம் என மொத்தம் இதுவரை ரூ.5 லட்சத்து 52 ஆயிரத்து 860 பணம் பறிமுதல் செய்யப்பட்டு அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: