திங்கள், 13 ஜனவரி, 2025

ஈரோட்டில் காவல் உதவி ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை

ஈரோடு டவுன் போலீஸ் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் சசிகுமார் (வயது 38). இவரது மனைவி சிவகாமி. இவர் வெள்ளோடு போலீஸ் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
சசிகுமார் தனது மனைவி குழந்தைகளுடன் அறச்சலூர் வீரப்பன்பாளையம் பகுதியில் வசித்து வந்தார். இந்நிலையில், இன்று காலை நீண்ட நேரமாக அவரது வீடு கதவு திறக்காததால் அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்தனர். அப்போது, சசிகுமார் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதனையடுத்து, அவரை மீட்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே சசிகுமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர். சசிகுமார் எந்த காரணத்துக்காக தற்கொலை செய்து கொண்டார் என தெரியவில்லை. இதுகுறித்து அறச்சலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை செய்து கொண்ட சசிகுமார் கடந்த 2009ம் ஆண்டு காவலராக பணியில் சேர்ந்தார். பின்னர், கடந்த 2017ம் ஆண்டு நடந்த காவல் உதவி ஆய்வாளர் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்று காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தான் ஈரோடு டவுன் போலீஸ் நிலையத்திற்கு பணியிடம் மாறுதலாகி வந்து பணியில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: