புதன், 29 ஜனவரி, 2025

பெருந்துறை சுசி ஈமு நிதி நிறுவன மோசடி வழக்கில் உரிமையாளருக்கு 10 ஆண்டு சிறை: ரூ.19 கோடி அபராதம்

ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்தவர் குருசாமி (வயது 44). இவர், கடந்த 2010ம் ஆண்டு பெருந்துறையில் சுசி ஈமு பார்ம்ஸ் இந்தியா என்ற நிறுவனத்தை தொடங்கி, கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்தார்.

இந்த நிறுவனத்தின் கிளை நிறுவனங்கள், பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டு வந்தது. அதன்படி முதல், 2-வது மற்றும் வி.ஐ.பி. என 3 பிரிவுகளில் திட்டத்தை அறிவித்து ரூ.1½ லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை பணம் வசூல் செய்தனர்.

இதில், மொத்தம் 1,087 முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ.19 கோடியே 2 லட்சம் மோசடி செய்ததாக கடந்த 2012-ம் ஆண்டு கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு கோவை தமிழ்நாடு முதலீட்டாளர்கள் பாதுகாப்பு நீதிமன்றமான டான்பிட் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் விசாரணை முடிந்து நேற்று நீதிபதி செந்தில்குமார் தீர்ப்பு கூறினார்.

அதில், மோசடி செய்த நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் குருசாமிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். மேலும் மோசடி செய்த தொகையான ரூ.19 கோடியே 2 லட்சத்து 40 ஆயிரத்தை அபராதமாக செலுத்தவும் நீதிபதி உத்தரவிட்டார்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: