புதன், 29 ஜனவரி, 2025

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓட்டுக்காக இந்தியில் பிரச்சார நோட்டீஸ் வெளியிட்ட திமுக

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓட்டுக்காக திமுக இந்தியில் நோட்டீஸ் அடித்து வெளியிட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட என்எம்எஸ் காம்பவுண்ட், சின்னமாரியம்மன் கோவில் வீதி, கொங்காலம்மன் கோவில் வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி, கிருஷ்ணா தியேட்டர் பகுதிகளில் சுமார் 10 ஆயிரம் வரை வடமாநில வாக்காளர்கள் உள்ளனர். அங்கு, பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள திமுகவினர் இந்தியில் பிரச்சார நோட்டீஸ் அடித்து வடமாநிலத்தவர்கள் உள்ள பகுதிகளில் விநியோகம் செய்து ஓட்டு சேகரித்து வருகின்றனர்.


அந்த நோட்டீசில் பெரியார், அண்ணா, கருணாநிதி மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரின் புகைப்படத்துடன், ஈரோடு கிழக்கு தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமாருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிப்பீர் என்று இந்தியில் "மத்தான் கரோ உகத சூரஜ்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

திமுகவின் இந்தி துண்டறிக்கையை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள நாம் தமிழர் கட்சியினர் இந்தி பேச மாட்டோம், இந்தி தெரியாது போடா, தமிழகத்துக்குள் இந்தியை நுழைய விடமாட்டோம்' என கூறும் திமுகவின் மொழிப்பற்று இதுதானா?' என விமர்சனம் செய்து வருகின்றனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: