திங்கள், 3 பிப்ரவரி, 2025

உலகிலேயே உயரமான 45 அடி உயர நந்தி கோவில் மற்றும் ஸ்ரீ ராஜலிங்கேஸ்வரர் சிவ ஆலயத்தின் கும்பாபிஷேக விழா. பரிகார ஸ்தலமாக அமைக்கப்பட்டுள்ள இந்த திருத்தலத்தை லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நந்தி தேவரின் அருள் பெற்று சென்றது.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

உலகிலேயே உயரமான 45 அடி உயர நந்தி கோவில் மற்றும் ஸ்ரீ ராஜலிங்கேஸ்வரர் சிவ ஆலயத்தின் கும்பாபிஷேக விழா. பரிகார ஸ்தலமாக அமைக்கப்பட்டுள்ள இந்த திருத்தலத்தை லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நந்தி தேவரின் அருள் பெற்று சென்றது. 

உலகிலேயே உயரமான 45 அடி உயர நந்தி கோவில் மற்றும் ஸ்ரீ ராஜலிங்கேஸ்வரர் சிவ ஆலயத்தின் கும்பாபிஷேக விழா. சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள வெள்ளாளகுண்டம் கிராமத்தில் நடைபெற்றது. சேலம் மாவட்டம் மட்டுமல்லாது நாமக்கல் தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் நந்தி மற்றும் சிவபெருமானை தரிசித்து சென்றனர். உலகிலேயே உயரமான 45 அடி உயர நந்தி கோவில் மற்றும் ஸ்ரீ ராஜலிங்கேஸ்வரர் சிவ ஆலயத்தின் கும்பாபிஷேக விழா சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள வெள்ளாளகுண்டம் கிராமத்தில் நடைபெற்றது. 
உலகிலேயே உயரமான 45 அடி உயர நந்தி சிலையின் வயிற்றுப் பகுதிக்குள் 15 அடி உயரத்தில் சிவபெருமான் மற்றும் 3 அடி உயரத்தில் அதிகார சிவலிங்கம் அமையபெற்றுள்ளது. நந்தி சிலையின் வயிற்றுப் பகுதிக்குள் சிவனை 50க்கும் மேற்பட்டோர் அமர்ந்து தரிசிக்கும் வண்ணம் விக்கிரகங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பு. இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் சேலம் மாவட்டத்தில்  உலகிலேயே உயரமான 45 அடி உயர நந்தி அமைய பெற்றுள்ளது மிகுத்த மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாகவும்,மனதில் நினைத்து வேண்டுதல் வைத்தால் நிச்சயம் அந்த காரியம் கைகூடி விடுவதாக பக்தர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: