வெள்ளி, 14 பிப்ரவரி, 2025

குத்துச்சண்டை போட்டியில் சாதனை.சேலம் மாணவர்களுக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் வழக்கறிஞர் ராஜேந்திரன் பாராட்டு.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

குத்துச்சண்டை போட்டியில் சாதனை.சேலம் மாணவர்களுக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் வழக்கறிஞர் ராஜேந்திரன் பாராட்டு. 

மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி மயிலாடுதுறையில் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் இருந்து 3000க்கும் மேற்பட்ட வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்ற இந்த போட்டி பல்வேறு எடை பிரிவுகளில் நடந்தது. இந்த போட்டியில் சேலம் குத்துச்சண்டை கிளப் வீரர் சேர்வராயன் வெள்ளி பதக்கம் வென்றார். இதே போல லோக ரட்சக சித்தார்த்தன் வெண்கல பதக்கமும் பெற்றனர். இதே போல பெண்கள் பிரிவில் ராஜராஜேஸ்வரியும், மது ஸ்ரீ என்ற வீராங்கனையும் வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்தனர். இந்த சாதனை மாநகர்கள் சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், சேலம் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் மற்றும் தமிழக சுற்றுலாத் துறை அமைச்சருமான வழக்கறிஞர் ராஜேந்திரன் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். சாதனை படைத்த வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் வழக்கறிஞர் ராஜேந்திரன் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் சேலம் மாநகர திமுக விளையாட்டு மேம்பாட்டு பிரிவின் அமைப்பாளர் ஆனந்தகண்ணன் மற்றும் குத்துச்சண்டை பயிற்சியாளர் சாமிதுரை உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: