S.K. சுரேஷ் பபு
.
சேலம் வெள்ளி கொலுசு மாநகரமாக விளங்கும் வகையில் வெள்ளி கொலுசு உற்பத்தி மையம் திறப்பு விழா. 25.29 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட இந்த பிரம்மாண்ட உற்பத்தி மையத்தினை தமிழக முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக துவக்கி வைத்தார்.
சேலம் மாநகரம் உட்பட மாவட்ட முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு குறு வெள்ளி கொலுசு உற்பத்தி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. ஒரு வெள்ளிக்கட்டியிலிருந்து சுமார் 32 பரிணாம வளர்ச்சிக்கு பிறகு ஒரு வெள்ளி கொலுசு முழுமை அடைகிறது. இதன் காரணமாக அந்த 32 பரிணாம வளர்ச்சியும் ஒரே இடத்தில் நிறைவடைந்து வெள்ளி கொலுசு விற்பனைக்கு அனுப்ப ஏதுவாக சேலம் மாநகரில் வெள்ளி கொலுசு உற்பத்தி மையம் அமைக்க வேண்டும் என ஏற்கனவே தமிழக முதலமைச்சரிடம் சேலம் வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்கள் கைவினை நல சங்கத்தின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. வெள்ளி கைவினை சங்கத்தின் கோரிக்கையை ஏற்று சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் வாயிலாக சேலம் அரியா கவுண்டம்பட்டியில் 25.29 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு மிகப் பிரம்மாண்டமான அளவில் வெள்ளி கொலுசு உற்பத்தி மையம் கட்டி முடிக்கப்பட்டு அதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது.
தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக சென்னையில் இருந்து துவக்கி இந்த நிகழ்ச்சிக்கு சேலம் மாவட்டம் அரி/யாகவுண்டம்பட்டியில் உள்ள உற்பத்தி மையத்தில் சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் திருமதி பிருந்தாதேவி உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் வரவேற்றனர். சேலம் வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்கள் கைவினை நல சங்கத்தின் தலைவர் ஸ்ரீ ஆனந்தராஜன் உட்பட அரசுத்துறை அதிகாரிகள் முன்னிலை வகித்த இந்த நிகழ்ச்சியில் திறப்பு விழா முடிந்த பிறகு சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் திருமதி பிருந்தா தேவி அவர்கள் குத்துவிளக்கேற்றி மையத்தின் செயல்பாடுகளை துவக்கி வைத்தார். இதனை எடுத்து சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி டாக்டர் பிருந்தா தேவி அவர்கள் உற்பத்தி மைய கட்டிடத்தினை பார்வையிட்டனர். அப்பொழுது சேலம் வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்கள் கைவினை நல சங்கத்தினர் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் தற்பொழுது தமிழக முதலமைச்சர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டுள்ள உற்பத்தி மையம் குறித்து சில பல கோரிக்கைகளை முன் வைத்தனர்.
கோரிக்கைகள் குறித்து சேலம் வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்கள் கைவினை நலச் சங்கத்தின் தலைவர் ஸ்ரீ ஆனந்த ராஜன் கூறுகையில், தங்களின் கோரிக்கையை ஏற்று சேலத்தில் துவக்கப்பட்டுள்ள வெள்ளி கொலுசு உற்பத்தி மைய திறப்பு விழாவின் காரணமாக, இனி சேலம் வெள்ளி கொலுசு மாநகரமாக விளங்கும் என்றும் இதற்கு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கும் தமிழக தொழில்துறை அமைச்சர் அவர்களுக்கும், தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வழக்கறிஞர் ராஜேந்திரன் அவர்களுக்கும் மற்றும் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் டி எம் செல்வகணபதி அவர்களுக்கும் தங்களது சங்கத்தின் சார்பில் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாகவும் தற்பொழுது துவக்கப்பட்டுள்ள இந்த உற்பத்தி மையத்தில் இடம்பெற்றுள்ள அரங்குகளை மானிய விலையில் தங்களைப் போன்ற உற்பத்தியாளர்களுக்கு வழங்கி அவர்களது வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். இந்த துவக்க விழா நிகழ்ச்சியின் போது சேலம் வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்கள் கைவினை நலச் சங்க நிர்வாகிகள் தொழில்துறை அதிகாரிகள் என திரளானோர் கலந்து கொண்டனர்.
0 coment rios: