வெள்ளி, 23 மே, 2025

சேலத்தில் தெய்வா அறக்கட்டளையின் வாயிலாக ஏழை எளியவர்களுக்கு 100-வது நாள் காலை சிற்றுண்டி வழங்கி மகிழ்ந்த தம்பதியினர்.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

சேலத்தில் தெய்வா அறக்கட்டளையின் வாயிலாக ஏழை எளியவர்களுக்கு 100-வது நாள் காலை சிற்றுண்டி வழங்கி மகிழ்ந்த  தம்பதியினர்.

சேலம் மாநகராட்சியின் 9-வது கோட்ட மாமன்ற உறுப்பினரும் வழக்கறிஞரும் சிறந்த சமூக  சேவகருமான தெய்வலிங்கம்,  வழக்கறிஞர் பணி மாமன்ற உறுப்பினர் பணி உள்ளிட்டவைகளுடன் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் பொது மக்களின் நலனுக்காக பல்வேறு சேவைகளை செய்து வருகிறார். அதன் அடிப்படையில் தெய்வா என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றினை தொடங்கி நாள்தோறும் நூற்றுக்கணக்கான ஏழை எளியவர்களுக்கும் முதியவர்களுக்கும் காலை சிற்றுண்டிகளை வழங்கி வருகிறார். இதன் தொடர்ச்சியாக தெய்வா அறக்கட்டளை சார்பாக சேலத்தைச் சேர்ந்த சரவணன் தேவி பாலா தம்பதியினர் தங்களது திருமண நாளை கொண்டாடும் விதமாக, தொடர்ந்து 100-வது நாளாக காலை சிற்றுண்டி வழங்கும் நிகழ்ச்சி சேலம் பொன்னம்மாபேட்டை புத்துமாரியம்மன் கோவில் அருகே நடைபெற்றது. தெய்வா அறக்கட்டளையின் நிறுவனர் வழக்கறிஞர் தெய்வலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில்  திருமண நாள் கொண்டாடும் தம்பதியினர் சரவணன் தேவிபாலா ஆகியோர் கலந்துகொண்டு ஏழை எளியவர்களுக்கும் முதியவர்களுக்கும் என நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கி மகிழ்கிறார். இந்த நிகழ்ச்சியில் தெய்வா அறக்கட்டளை நிர்வாகிகள் சுகுமார் வாஞ்சிநாதன் குமரேசன் தர்மலிங்கம் தனபால் மணிமாறன் ரகுபதி விஜயகுமார் மற்றும் ரவி உட்பட  குடும்பத்தார் என திரளானோர்  கலந்து கொண்டனர்.


শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: