திருப்பூர் மாவட்டம் பல்லடம் அறிவொளி நகர் பகுதி சேர்ந்தவர் முத்து 55. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கண் சிகிச்சை பெற்று விட்டு வீட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.அப்போது அறிவொளி நகரை சேர்ந்த அப்துல் என்பவர் காண்ட்ராக்ட் மூலம் வேலை செய்து வந்துள்ளார் இந்த நிலையில் அவரிடம் வேலை செய்யும் குமரேசன் என்பவர் முத்துவை மங்கலம் வளையபாளையம் நான்கு சாலை பகுதியில் உள்ள சக்திவேல் என்பவரது வீட்டில் உள்ள சிமெண்ட் சீட்டை கழற்ற வேலைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது முத்து சிமெண்ட் சீட்டை கழற்றி கொண்டிருக்கும்போது சுமார் 12 அடி உயரத்தில் இருந்து சிமெண்ட் சீட் உடைந்ததில் முத்து கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.தொடர்ந்து பலத்த காயமடைந்த அவரை மீட்ட அப்பகுதியினர் திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் முத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெள்ளி, 23 மே, 2025
Author: shabanewstamil
We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.
0 coment rios: