திருப்பூர் மாவட்டம் காங்கேயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட படியூர் பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பெறுவதாக போலீசாருக்கு ரகசிய கிடைத்தது.இதனை தொடர்ந்து தாராபுரம் மதுவிலக்கு காவல்துறையினர் உடனடியாக அந்த பகுதியில் உள்ள பேக்கரி அருகே சென்ற போது அங்கு சந்தேகப்படும் வகையில் ஒரு டிராவல் பேக்கை வைத்துக் கொண்டு நின்றிருந்த நபரைப் பிடித்து விசாரித்தனர்.அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியுள்ளார்.தொடர்ந்து அவரை காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தியதில் அவர் ஹானஸ்ட்ராஜ் (31), என்பதும் சிலோன் காலனி, தம்மநாயக்கன்பட்டி, சேலம் பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.தொடர்ந்து தற்போது அவர் திருப்பூர் நாச்சிபாளையம் பகுதியில் வசித்து வருவதும் தெரியவந்தது.மேலும் அவர் சட்ட விரோதமாக கஞ்சாவை ஆந்திரா சித்தூரிலிருந்து வாங்கி வந்து விற்பதற்காக வைத்திருந்ததால் அவரை கைது செய்து செய்த போலீசார் அவரிடமிருந்த சுமார் 10 கிலோ எடையுள்ள கஞ்சாவை கைப்பற்றினர்.
வெள்ளி, 23 மே, 2025
Author: shabanewstamil
We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.
0 coment rios: