வெள்ளி, 23 மே, 2025

சேலம் சிறுமலர் மேல்நிலைப் பள்ளியில் கலையரங்கம் திறப்பு விழா. முன்னாள் மாணவர்கள் மற்றும் முன்னாள் ஆசிரியர்கள் பங்களிப்புடன் நடைபெற்ற இந்த விழாவில் ஏராளமானவர்கள் பங்கேற்பு.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு.

சேலம் சிறுமலர் மேல்நிலைப் பள்ளியில் கலையரங்கம் திறப்பு விழா. முன்னாள் மாணவர்கள் மற்றும் முன்னாள் ஆசிரியர்கள் பங்களிப்புடன் நடைபெற்ற இந்த விழாவில் ஏராளமானவர்கள்  பங்கேற்பு.

சேலம் நான்கு ரோடு பகுதியில் சிறுமலர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பகுதியில் சேலம் மாநகரம் உட்பட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் பிரம்மாண்ட விளையாட்டு மைதானம் உட்பட அனைத்து வசதிகளும் உள்ள நிலையில் கலையரங்கம் என்பது ஒரு குறையாகவே இருந்து வந்தது. இந்த நிலையில் இந்த பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் மற்றும் முன்னாள் ஆசிரியர்கள் பங்களிப்புடன் மிகப் பிரம்மாண்டமான அளவில் கலையரங்கம் அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியர்  செபஸ்தியான் தலைமையில் நடைபெற்ற விழாவில் சேலம் மதுரை மாவட்ட ஆயர் முனைவர் அருள்செல்வம் இராயப்பன், சேலம் மறை மாவட்ட மேநாள் ஆயர் முனைவர் சிங்கராயன் மற்றும் தர்மபுரி மாவட்ட ஆயர் முனைவர் லாரன்ஸ் பயஸ் உள்ளிட்ட ஒரு சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பிரமாண்ட அளவில் அமைக்கப்பட்டு இருந்த கலையரங்கத்தினை ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தனர். தொடர்ந்து நடைபெற்ற விழாவில் பணி நிறைவு காணும் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு நன்றி பாராட்டு விழாவும், தொடர்ந்து களையெரங்கம் அமைப்பதற்கு பொருள் உதவி வழங்கிய நன்கொடையாளர்களுக்கு நன்றி பாராட்டும் விழாவும் நடைபெற்றன. வாழ்த்துரை ஏற்புரை உள்ளிட்ட உள்ளிட்ட நிகழ்வுகளை எடுத்து பள்ளி மாணாக்கர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 
இந்த நிகழ்ச்சியில் தொழிற்கல்வி ஆசிரியர் கார்த்திகேயன் இடைநிலை ஆசிரியர் முரளி மற்றும் உடற்கல்வி இயக்குனர் ராபர்ட் உட்பட மாணவரின் முக்கிய பிரமுகர்கள் முன்னாள் மாணவர்கள் அவரிடம் குடும்பத்தார் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: