திங்கள், 12 மே, 2025

6-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அனைத்து கட்டுமான பொறியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சேலத்தில் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆர்ப்பாட்டம்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு.

6-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அனைத்து கட்டுமான பொறியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சேலத்தில் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆர்ப்பாட்டம்

ஆற்று மணல் குவாரிகளை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அனைத்து கட்டுமான பொறியாளர்கள் சங்கங்களின்  கூட்டமைப்பு சார்பில் சேலத்தில் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டமைப்பின் தலைவர் விஜயபானு தலைமை வகித்தார். கூட்டமைப்பின்  செயலாளர் பாஸ்கர் மற்றும் கொளத்தூர் குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்த இந்த ஆர்ப்பாட்டத்தில் கிரஷர் உரிமையாளர்கள் கட்டுமான தொழிலை சீரழிக்கும் வகையில் அநியாயமாக உயர்த்தியுல்ல எம்.சாண்ட், பி. சாண்ட்,  ஜல்லி கற்கள் விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும், கல்குவாரிகளை அரசுடைமையாக்கவும் பொது மக்களுக்கு தரமான கல்குவாரி பொருட்கள் நியாயமான விளைவில் கிடைத்திடவும் அரசு அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் கட்டுமான பொருட்களை அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட ஆரம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். 
இந்த ஆர்ப்பாட்டத்தில், பில்டர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா, சேலம் பெஸ்ட் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேசன், ஆத்தூர் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன், CREDAI சேலம், CRIC கட்டுமான மற்றும் மனை தொழில் கூட்டமைப்பு, சேலம் மாவட்ட பொதுப்பணித்துறை கட்டிடம் மற்றும் நீர்வள ஆதாரத்துறை ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கம், சேலம் மாவட்ட பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்களும் நலச்சங்கம், சேலம் மாவட்ட ஒப்பந்ததாரர்கள் சங்கம், சேலம் மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் சங்கம் மற்றும் சேலம் கட்டிட மேஸ்திரிகள் அசோசியேஷன் சங்க நிர்வாகிகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: