வியாழன், 12 ஜூன், 2025

மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு ஜூன் 12 குறித்த காலத்தில் இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைத்தார்...மேட்டூர் அணையின் வரலாற்றில் 92 வது முறையாக காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு ஜூன் 12 குறித்த காலத்தில்  இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைத்தார். மேட்டூர் அணையின் வரலாற்றில் 92 வது முறையாக காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

,மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு ஆண்டுதோறும் ஜூன் 12-ஆம் தேதி தண்ணீர் திறப்பது வழக்கம். இதன் மூலம் சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் சுமார்  16.40 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
முதலில் குறுவைக்கும் பிறகு சம்பா, தாளடி  சாகுபடி என முப்போக விவசாயத்திற்கு தண்ணீர் திறக்கப்படும். 
5.30 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடியும், 8.90 லட்சம் ஏக்கரில் சம்பாவும், 4. 20லட்சம் ஏக்கரில் தாளடியும் சாகுபடி செய்யப்படும்.
காவிரி டெல்டா பாசனத்திற்கு குறிப்பிட்ட நாளான ஜூன் 12-ல் 19 முறையும், காலதாமதமாக 61 முறையும், ஜூன் 12 க்கு முன்பாக 11 முறை என இதுவரை  91 ஆண்டுகள் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டில் குறிப்பிட்ட நாளான ஜூன் 12-ல் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. நடப்பாண்டில் குறிப்பிட்ட காலகட்டமான 12 ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைத்துள்ளார். மேலும் இந்த நிகழ்ச்சியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பொதுப்பணித்துறை துறை அமைச்சர் ஏ. வா வேலு சுற்றுலா துறை அமைச்சர் ராஜேந்திரன் வேளாண்மை துறை அமைச்சர் எம்ஆர் கே. பன்னீர் செல்வம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர்
சேலம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் டிஎம் செல்வகணபதி மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மணி   சேலம் மாவட்டம் ஆட்சியர் பிருந்தாதேவி உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: