வியாழன், 12 ஜூன், 2025

டாக்டர் ஐயாவை விட்டு விலகி அண்ணன் அன்புமணி அவர்களுடன் துணை நிற்கப் போவதாக விலகல் கடிதம். பசுமைத்தாயக மாநில இணை செயலாளர் சத்திரிய சேகரின் அறிக்கையால் சேலம் பாமகவினர் இடையே பரபரப்பு.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

தங்களது செயல்களால் பல லட்சக்கணக்கானோர் தங்களது மனதில் இருந்து விலகி உள்ள நிலையில், நீங்கள் நீக்கும் முன்பாக நானாக தங்களிடம் இருந்து விளக்குகிறேன். பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸிற்கு சேலம் பசுமைத்தாயக நிர்வாகி அறிக்கையால் பரபரப்பு.


டாக்டர் ராமதாஸ் அவர்களுக்கும், டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கும் சமீபகாலமாக பனிப்போர் நிலவி வருவது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்களின் ஆதரவாளர்களை மாவட்ட முழுவதும் உள்ள முக்கிய பொறுப்புகளில் இருந்து டாக்டர் ராமதாஸ் விளக்கி உள்ளது பாமகவினர் இடையே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உங்களது. இந்த நிலையில் சேலத்தைச் சேர்ந்த பசுமைத்தாயகம் அமைப்பின் மாநில இணை செயலாளர் சத்ரிய சேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஐயா, தங்களது செயல்களால் பல லட்சக்கணக்கானோர் உங்கள் மனதில் இருந்து விலகிய நிலையில் நீங்கள் நீக்கும் முன்பாக, நானாக உங்களிடம் இருந்து விலகிக் கொள்கிறேன். நன்றி .. நன்றி ..

கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த குழப்பங்களுக்கு தீர்வு கிடைக்கும் என்று ஆழ்ந்த நம்பிக்கையோடு இருந்தோம்.
அதே நம்பிக்கையோடு  மாமல்லபுரத்தில் நடைபெற்ற இளைஞர் பெருவிழா மாநாட்டில் கலந்து கொண்டு மாநாட்டை இந்தியாவே வியந்து பார்க்கும் வகையில் "சின்ன அய்யா"அண்ணன் அன்புமணியால் வெற்றி பெறச் செய்தோம். அதற்குப் பிறகு ஏதேனும் நல்லது நடக்கும் என எண்ணியிருந்தோம். ஆனால் சட்டரீதியாக நீங்கள் சொன்ன அனைத்து பணிகளையும் சிறப்புடன் செய்து முடித்த, அருமை சகோதரர் வழக்கறிஞர் பாலு அவர்களை  கட்சிப் பொறுப்பில் இருந்து விடுவித்து ஐயா அவர்கள் அறிக்கை வெளியிட்ட பின்பு கடந்த காலங்களைப் போல, இந்த முறை கடந்து போக முடியலை. 
எதிர்கால பாட்டாளி மக்கள் கட்சி வளர்ச்சி பணிகளை கருத்தில் கொண்டு, மேலும் 10.5% இட ஒதுக்கீடு உள்ளிட்ட, மருத்துவர் ஐயா அவர்களின் பல்வேறு கனவுகளை நனவாக்கிட அண்ணன் மருத்துவர் அன்புமணி அவர்களுக்கு துணையாக இருப்போம்...
பல்லாயிரக்கணக்கான நண்பர்கள், பல்வேறு கட்சியினர் நேரிலும் மற்றும் தொலைபேசி வாயிலாகவும் தொடர்பு கொண்டு லட்சக்கணக்கான தொண்டர்களின் தியாகத்தில் உருவான இந்த இயக்கத்தை வளர்த்த ஐயா அவர்களே அழிவிற்கு பாதை வகுப்பது போல போல தெரிகிறதே என்றெல்லாம் கேட்கிறார்கள்.
மனம் மிகுந்த வேதனையோடு உள்ளது .. ஆனால் மக்கள் காவலர் தமிழின போராளி மருத்துவர் ஐயா அவர்களால் உருவாக்கப்பட்ட இந்த இயக்கத்தை, என்னை போன்று  லட்சக்கணக்கான தொண்டர்கள் இருக்கும் வரை,அழிக்க யாராலும் முடியாது. அதே நம்பிக்கையோடு அதை உறுதிப்படுத்தும் வகையில் அண்ணன் அன்புமணி அவர்களது கரங்களை,வலுவாக,  இறுகப்பற்றி இயக்கத்தை வலுப்படுத்துவோம் ... "சின்ன அய்யா" அண்ணன் அன்புமணி தலைமையில் எதிர்காலத்தில் ஆளும் அதிகாரத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சியை கொண்டு செல்வோம். பெற்ற மகனுக்கு, ஒரே ஒரு செல்ல மகனுக்கு,மிகவும் திறமையான,"சின்னையா" அன்புமணி அவர்களுக்கே இந்த நிலை என்றால் நாங்கள் எல்லாம் எம்மாத்திரம்... வக்கீல் பாலு உள்ளிட்ட இந்த இயக்கத்தை வலுவாக்கிட உழைத்த எத்தனையோ மாவட்ட செயலாளர்கள் தலைவர்கள் நீக்கம் என்று சொல்லும் போது நாங்கள் எல்லாம் எம்மாத்திரம்...
கடந்த சுமார் 45 ஆண்டுகளுக்கும் மேலாக உங்களோடு பயணம் செய்த அந்த நினைவுகளோடு,கனத்த இதயத்தோடு, மீதி நான் இருக்கும் அந்த காலத்தையும் கடந்து செல்வேன்.நன்றி...
        சத்ரியசேகர். சி. பெ.
என்று குறிப்பிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையால் சேலம் மாநகரம் உட்பட மாவட்டம் முழுவதும் உள்ள பாமகவினுடைய கடும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. 






শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: