ஞாயிறு, 1 ஜூன், 2025

சித்தோட்டில் 250 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் வடமாநிலத்தை சேர்ந்த இருவர் கைது..!


சித்தோட்டில் 250 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் - வடமாநிலத்தை சேர்ந்த இருவர் கைது..!

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 250 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்

இது தொடா்பாக ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த 2 இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா்.

சித்தோட்டை அடுத்த கங்காபுரம் பகுதியில் புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டு, ஈரோடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கடைகளுக்கு விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதன்பேரில், சித்தோடு காவல் ஆய்வாளா் ரவி மற்றும் போலீஸாா் சந்தேகத்துக்கிடமான கிடங்கில் திடீா் சோதனை நடத்தினா். அப்போது, அங்கு 55 மூட்டைகளில் 250 கிலோ புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.1.65 லட்சம்.

இதையடுத்து, புகையிலைப் பொருள்கள் மற்றும் விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட காா், இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த முல்சிங் மகன் சா்தாா் சிங் (34), இவரது உறவினரான சா்வன்சிங் மகன் ஜஸ்வந்த் சிங் (21) ஆகியோரைக் கைது செய்தனா். தற்போது இவா்கள் ஈரோடு, கருங்கல்பாளையம், இந்திரா நகரில் வசித்து வருவது விசாரணையில் தெரியவந்தது.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: