சனி, 14 ஜூன், 2025

உலக ரத்தக் கொடையாளர்கள் தினம். குருவிக்கொடை வழங்கி அசத்திய பார்பி குயின் ஊழியர்கள்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு.

உலக ரத்தக் கொடையாளர்கள் தினம். குருவிக்கொடை வழங்கி அசத்திய பார்பி குயின் ஊழியர்கள். 

உலக சுகாதார நிறுவனத்தால் ஆண்டுதோறும் ஜூன் 14ஆம் தேதி உலக ரத்த கொடையாளர்கள் தினமாக உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி உலக கொடையாளர்கள் தினமான இன்று சேலத்தில் பிரபல உணவகமான பார்பி குயின் நிறுவனம் மற்றும் சேலம் ரத்த வங்கி இணைந்து மாபெரும் ரத்ததான முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சேலம் குகை கிளை உணவகத்தில் நடைபெற்ற இந்த உலக இரத்த  கொடையாளர்கள் தினத்தில் சேலம் மாநகரம் சுற்றியுள்ள பார்பி குயின் நிறுவன ஊழியர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது குருவிகளை தானமாக வழங்கினர். திரைப்பட காமெடி மற்றும் குணச்சித்திர நடிகர் பெஞ்சமின் துவக்கி வைத்த இந்த முகாமில், குருதி கொடையாளரான பார்பி குயின் ஊழியர்களுக்கு நிர்வாகத்தின் சார்பில் நினைவு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இந்த நிகழ்வில் பார்பி குயின் நிர்வாகத்தினர் ருத்ரகோடி, உமர் முக்தர், பீர் மைதீன் மற்றும் ரத்த வங்கியின் நிர்வாக இயக்குனர் மணிகண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: