புதன், 16 ஜூலை, 2025

14 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி. முதன்முறையாக சேலம் மாவட்ட அணியினர் முதல் பரிசை வென்று சாதனை.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு.

14 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி. முதன்முறையாக சேலம் மாவட்ட அணியினர் முதல் பரிசை வென்று சாதனை.

2025-2026 ஆம் ஆண்டிற்கான 14 வயதுக்குட்பட்ட மாவட்டங்களுக்கு இடையேயான மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி.தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் ஆண்களுக்கான கிரிக்கெட் போட்டிகள் 
கடந்த இரண்டு மாதங்களாக தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றன. இதன் இறுதிப்
போட்டியில் சேலம் மாவட்ட அணியும் காஞ்சிபுரம் மாவட்ட அணியும் மோதின. சென்னையில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் சேலம் மாவட்ட அணி முதன் முதலாக கோப்பையை வென்றது. முதலில் விளையாடிய சேலம் மாவட்ட அணி 1st Innings 239-7 ( 90 Overs ) காஞ்சிபுரம் மாவட்ட அணி 70-10 (43.2 Over) 2nd Innings சேலம் மாவட்ட அணி 156-1 DEC ( 26 Overs ) காஞ்சிபுரம் மாவட்ட அணி 96-9 (40 Overs). கோப்பையை வென்ற சேலம் மாவட்ட அணி வீரர்கள் சேலம் ரயில் நிலையம் வந்தடைந்தனர். அவர்களை வரவேற்க மாவட்ட செயலாளர் பாபு குமார் தலைமையில் சேலம் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தலைவர்: திரு. R பிரகாஷ் செயலாளர்: திரு. V பாபு குமார் துணை செயலாளர்: திரு. M ராஜு துணைத் தலைவர்: திரு. M.V ராஜ்குமார் நிர்வாக குழு உறுப்பினர்கள் திரு. D.S. சந்தோஷ் குமார திரு. M.V. ராஜ்குமார் திரு. D. சுதர்சன்
திரு. வசந்த் ராஜ் திரு. துரை
தேர்வாளர்கள் திரு.குமார் திரு.முரளி திரு. சங்கரநாராயணன்
திரு.சரவணன் பயிற்சியாளர்கள்
திரு. சாரதி திரு. ரமேஷ் உள்ளிட்ட ஒரு கலந்து கொண்டு வெற்றி பெற்ற சேலம் மாவட்ட அணி வீரர்களை வாழ்த்தி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: