ஞாயிறு, 20 ஜூலை, 2025

ஆடி கிருத்திகை ஒட்டி சேலம் பள்ளப்பட்டி பழனி ஸ்ரீ பாலதண்டாயுதபாணி ஆசிரமத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனை. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு.

ஆடி கிருத்திகை ஒட்டி சேலம் பள்ளப்பட்டி பழனி ஸ்ரீ பாலதண்டாயுதபாணி ஆசிரமத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனை. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம். 

தமிழ் கடவுள் ஆன முருகப் பெருமானுக்கு உகந்த தினமாக கிருத்திகை தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் ஆடி மாதத்தில் வரும் முதல் கிருத்திகை நாளான என்று சேலம் பள்ளப்பட்டியில் உள்ள பழனி ஸ்ரீ பால தண்டாயுதபாணி ஆசிரமத்தில் எம்பெருமான் முருகப்பெருமானுக்கு இன்று காலை முதல் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன 
 குறிப்பாக பால் மஞ்சள் குங்குமம் இளநீர் திருமஞ்சனம் உள்ளிட்ட மங்கள பொருட்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து எம்பெருமான் பழனி ஸ்ரீ பால தண்டாயுதபாணிக்கு ராஜ அலங்காரம் மேற்கொள்ளப்பட்டு பல்வேறு மலர்களால் சிறப்பு அலங்காரங்கள் மேற்கொள்ளப்பட்டு மகாதீப ஆராதனைகள் நடைபெற்றன. இதில் பள்ளப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆடி முதல் கிருத்திகை நாளில் வழிபாடு மேற்கொண்டனர். இதனை அடுத்து ஆசிரமத்தின் சார்பில் திருக்கோவிலுக்கு வந்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டன. இந்த சிறப்பு பூஜையில் ஆசிரம நிறுவனர் முருகனடியார் பாபு உட்பட நிர்வாகிகள் சுப்ரமணியம், கேசவமூர்த்தி, வசியா, வாசுகி மற்றும் கிருபா உள்ளிட்டோர் சிறப்பு பூஜைக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.



শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: