புதன், 23 ஜூலை, 2025

சேலத்தில் பிரசித்திபெற்ற கோட்டை ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோவிலில் ஆடிப்பெரு விழாவை ஒட்டி கொடியேற்ற நிகழ்வு..... அம்மனை வழிபட்டு சென்ற ஏராளமான பக்தர்கள்..

 
சேலம்.
S.K.சுரேஷ்பாபு.

சேலத்தில் பிரசித்திபெற்ற கோட்டை ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோவிலில்  ஆடிப்பெரு விழாவை ஒட்டி கொடியேற்ற நிகழ்வு..... அம்மனை வழிபட்டு சென்ற ஏராளமான பக்தர்கள்..

தமிழ் மாதங்களில் வரும் ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது.இதனையொட்டி தமிழகத்தில் உள்ள அம்மன் ஆலையங்களில் திருவிழாக்கள் நடத்தப்படுவது வழக்கம். அதிலும் குறிப்பாக சேலம் மாவட்டத்தில் நடைபெறும் ஆடிபெருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த மாதத்தில் ஆடி-1, ஆடி-18, ஆடி அமாவாசை, ஆடி வெள்ளி என அடுத்தடுத்து விஷேசங்கள் வரும். இதுபோன்ற நாட்களில் கோவில்களில் விஷேச பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி ஆடி மாதம்   தொடங்கியது முதல் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் ஆலயங்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக சேலத்தில் உள்ள 8 பட்டிகளுக்கும் காவல் தெய்வமாக விளங்கி வரும், சேலத்தில் பிரசித்திபெற்ற கோட்டை ஸ்ரீ பெரிய மாரியம்மன் திருக்கோவிலில், நாள்தோறும் காலை முதலே அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன.  சேலம் கோட்டை ஸ்ரீ பெரிய மாரியம்மன் திருக்கோவிலில் ஆடி பெருவிழாவில் முக்கிய நிகழ்வான  பூச்சாட்டுகள் கோலாகலமாக நடைபெற்றது கண் கணக்கில் மலர்களை குவித்து அம்மனை பூரிக்க வைத்தனர் பக்த கோடிகள். ஆடிபெருவிழா தொடங்கி விட்டது என்பதும் அதனைத் தொடர்ந்து இன்று சேலம் கோட்டை அருள்மிகு ஸ்ரீ பெரிய மாரியம்மன் திருக்கோவிலில் ஆடி பெருவிழாவையூட்டி கொடியேற்று நிகழ்வு வெகு உற்சாகத்துடன் நடைபெற்றன. திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் சக்திவேல் முன்னின்று நடத்திய இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை நெடுநேரம் காத்திருந்து வழிபட்டுச் சென்றனர். 
வரும் 29ஆம் தேதி விழாவின் முக்கிய நிகழ்வான கம்பம் நடுதல் விழா நடைபெற உள்ளது என்பதும், அதனைத் தொடர்ந்து சக்தி அளித்தல் பொங்கல் வைபவம் மாவிளக்கு எடுத்தல் உருளுதண்டம் நிகழ்வுகளுடன் திருக்கோவிலுக்கு புதிதாக கட்டப்பட்ட திருத்தேரோட்டம்  முதன் முறையாக அடுத்த மாதம் 8ம் தேதி இடம் கோட்டை ஸ்ரீ பெரிய மாரியம்மன் திருக்கோவிலில் நடைபெற உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் விழாவிற்கான ஏற்பாட்டு பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் திருக்கோவில் செயல் அலுவலர் மற்றும் திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: