ஞாயிறு, 6 ஜூலை, 2025

இஸ்லாமியர்களின் தியாக திருநாளில் இறைத்தூதரின் பேரன்களுக்காக இஸ்லாமிய இளைஞர்களின் தியாகத்தை போற்றிப் பாராட்டிய சேலம் கோட்டை பகுதியை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் ஷபி.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

இஸ்லாமியர்களின் தியாக திருநாளில் இறைத்தூதரின் பேரன்களுக்காக இஸ்லாமிய இளைஞர்களின் தியாகத்தை போற்றிப் பாராட்டிய சேலம் கோட்டை பகுதியை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் ஷபி.

இஸ்லாமியர்களின் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான மொஹரம் திருநாள் உலக இஸ்லாமியர்களால் கடைபிடிக்கப்பட்டு  வருகிறது. இறைதூதர் நபிகள் நாயகத்தின் பேரர்களான ஹசேன் மற்றும் உசேன் கொல்லப்பட்டதை நினைவு கூறும் விதமாகவும், அவர்களது தியாகத்தை போற்றும் விதமாக கொண்டாடப்படும் இந்த திருநாளையொட்டி சேலத்தில் இஸ்லாமியர்களால் கடைபிடிக்கப்பட்டது. தியாகத் திருநாளாக கருதப்படும் இந்த மொகரம் விழாவையொட்டி சேலம் கோட்டை சுன்னத் ஜமாத் சார்பில் புலி ஆட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. சேலம் கோட்டை பகுதியில் உள்ள ஃபிரண்ட்ஸ் மஹாலில் துவங்கிய இந்த புலி ஆட்ட நிகழ்வில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை புலிவேடமிட்டு மேளதாளம் இசைக்கு ஏற்றவாறு புலி நடனமாடி இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்களின் பேரர்களின்  தியாகத்தை போற்றினார். கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற இந்த புலி நடன ஊர்வலமானது அந்த பகுதியில் உள்ள மிகச்சிறந்த சமூக செயற்பாட்டாளர் தன்னிறன் பாராமல் பொதுநலன் கருதி ஏழை எளிய இஸ்லாமிய மக்களுக்கு மட்டுமல்லாமல் ஏனைய மக்களுக்கும் இதுவரை சேவை செய்து வரும் கோட்டை பகுதியை சேர்ந்து சிறந்த சமூக செயற்பாட்டாளர் ஷபி அவர்கள் வீட்டின் அருகில் சென்ற இந்த திருநாள் ஊர்வலத்தில் பங்கேற்ற புலி வேடம் தரித்து ஷல் அல்லாவின் பேரர்களின் தியாகத்தை போற்றும் வகையில் நடனமாடிய சிறியவர் முதல் பெரியவர்களுக்கு தன்னாலான மரியாதையை செலுத்தி மகிழ்ந்தார் உடன் அவரது குடும்பத்தார் அனைவரும் உடன் இருந்தனர்.




শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: