திங்கள், 4 ஆகஸ்ட், 2025

சேலம் பொன்னம்மாப்பேட்டையில் கிணற்றில் தவறி விழுந்த மாடு. உயிருக்கு போராடிய மாட்டினை தீயணைப்புத் துறையினர் உதவியுடன் மீட்ட மாமன்ற உறுப்பினர்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு.

சேலம் பொன்னம்மாப்பேட்டையில் கிணற்றில் தவறி விழுந்த மாடு. உயிருக்கு போராடிய மாட்டினை தீயணைப்புத் துறையினர் உதவியுடன் மீட்ட மாமன்ற உறுப்பினர். 

சேலம் மாநகராட்சியின் 9 வது கோட்ட மாமன்ற உறுப்பினரும், வழக்கறிஞரும் சிறந்த சமூக சேவகருமான தெய்வலிங்கம் சிறந்த மனிதாபிமானம் கொண்டவர் என்பதற்கு மேலும் ஒரு உதாரணம். சேலம் பொன்னம்மாபேட்டை புத்து மாரியம்மன் கோவில் எதிரே 11 வது கோட்டத்திற்கு உட்பட்ட செங்கல் அணை சாலையில் ஜோதிமணி என்பவருக்கு சொந்தமான கிணற்றில் மாடு ஒன்று கிணற்றுக்குள் தவறி விழுந்து விட்டதாக 9 வது போட்ட மாமன்ற உறுப்பினர் தெய்வலிங்கத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த அவர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு உடனடியாக சேலம் தீயணைப்பு மற்றும் மீட்புப்படை துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படைத்துறை என சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிணற்றுக்குள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மாட்டினை கயிறுகள் கட்டி உயிருடன் பத்திரமாக மீட்டனர். தீயணைப்பு மற்றும் மீட்புபடை துறையினருடன் மாமன்ற உறுப்பினர் தெய்வலிங்கம் மற்றும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் இணைந்து கிணற்றுக்குள் தவறி விழுந்த உயிருடன் மாடு மீட்கப்பட்டது அனைவரிடமும் வரவேற்பினை பெற்றுள்ளது.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: