சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலம் பொன்னம்மாபேட்டையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம். தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் தொடங்கி வைத்து தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு உதவி ஆணைகளை வழங்கினார்.
தமிழக முழுவதும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் கடந்த மாதம் 15 ஆம் தேதி துவக்கி வைத்தார். இதனை அடுத்து தமிழக முழுவதும் மாவட்டங்கள் தோறும் முகங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக சேலம் அம்மாபேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட பொன்னம்மாபேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிக்கு உட்பட்ட மக்களுக்கான சிறப்பு முகாம் சேலம் பொன்னம்மாபேட்டை வாய்க்கால்பட்டறையில் உள்ள சுபம் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. முகாமினை தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் வழக்கறிஞர் ராஜேந்திரன் துவக்கி வைத்து ஆய்வு மேற்கொண்டார். சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி டாக்டர் பிருந்தா தேவி மற்றும் சேலம் மாநகராட்சி ஒன்பதாவது கோட்ட மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் தெய்வம் ஆகியோரது முன்னிலையில் நடைபெற்ற இந்த முகாமில் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு தமிழக அரசின் சார்பில் வழங்கப்படக்கூடிய பல்வேறு உதவியா ஆணைகளை தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வழக்கறிஞர் ராஜேந்திரன் வழங்கினார்.
ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு தமிழக அரசின் சார்பில் வழங்கப்படக்கூடிய உதவி திட்டங்களுக்கான விண்ணப்பங்களை பெற்று ஆர்வத்துடன் பூர்த்தி செய்து அதிகாரிகளிடம் கொடுத்தனர். இதில் அதிகப்படியாக மாதாந்திர மகளிர் உரிமை தொகை பெறுவதற்கான விண்ணப்பங்களே அதிக அளவில் விநியோகிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த சிறப்பு முகாமில் அனைத்து அரசு துறை அதிகாரிகள் திமுக நிர்வாகிகள் என திரளானோர் கலந்து கொண்டனர்.

0 coment rios: