வெள்ளி, 26 செப்டம்பர், 2025

சேலத்தில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சி நிர்வாகிகளுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் கலந்து ஆலோசனை கூட்டம்.

சேலம்.
S.K.சுரேஷ்பாபு.

சேலத்தில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சி நிர்வாகிகளுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் கலந்து ஆலோசனை கூட்டம். 

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள வாக்குப்பதிவு இயந்திர பாதுகாப்பு அறையினை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் பிருந்தா தேவி அவர்கள் காலாண்டு தணிக்கை மேற் கொண்டார். இந்த கூட்டத்தில்  தேசிய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட National people's party Tamil Nadu 
தேசிய மக்கள் கட்சி தமிழ்நாடு,  
சார்பாக இந்த கூட்டத்தில் தமிழ்நாடு மாநில செயலாளர் ராம்ஜி உட்பட தேசிய மற்றும் மாநில கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். 
சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் தலைமையில் சேலம் மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் எண்ணிக்கை 1200 க்கு மேல் உள்ள பாகங்களை பிரிப்பது மற்றும் வாக்குச்சாவடி அமைவிடங்களை மாற்றம் செய்வது, வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்பது குறித்து பல்வேறு கருத்துக்களை கலந்தாலோசனை கூட்டத்தில் தெரிவித்தனர்.
 

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: