சனி, 27 செப்டம்பர், 2025

இந்திய நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில் சேலம் மாவட்ட தலைவராக முகமது இர்ஃபான் தேர்வு.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

இந்திய நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில் சேலம் மாவட்ட தலைவராக முகமது இர்ஃபான் தேர்வு. 

தமிழ்நாடு  காங்கிரஸ் கட்சியின் மனித உரிமை துறையின் மாவட்ட தலைவராக இருப்பவர் முகமது இர்ஃபான். சமூக சேவையில் அதீத நாட்டம் கொண்ட இவர், இந்திய நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சிலிங் சேலம் மாவட்ட தலைவராக தேர்வு செய்யப்பட்டார். 
இதற்கான விழாவில் இந்திய நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சிலின் தேசிய தலைவர் MJF. Dr. அரிமா சுப்பிரமணி இந்திய நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சிலிங் சேலம் மாவட்ட தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான சான்றிதழை வழங்கி பாராட்ட தெரிகிறார். மேலும் அமைப்பின் செயல்பாடுகள் குறித்தும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் முகமது இர்ஃபானுக்கு சுப்பிரமணி பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கினார்.
இறுதியாக சேலம் மாவட்ட தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு இந்திய நுகர்வோர் பாதுகாப்பு குழுவில் தமிழ்நாடு ஒருங்கிணைப்பு குழு தலைவர் அம்ஜத் கான் அவர்களுக்கு சேலம் மாவட்ட புதிய தலைவர் முகமது இர்ஃபான் தனது நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: