சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
வீட்டை காலி செய்ய கூறி சேலத்தில் திமுக 56 கோட்ட மாமன்ற உறுப்பினர் சரவணன் அடியாட்களுடன் கொலை மிரட்டல். பாதிக்கப்பட்ட பெண் தனது இரண்டு பெண்களுடன் திமுக மாமன்ற உறுப்பினருக்கு எதிராக ஆட்சியரிடம் புகார். தவறும் பட்சத்தில் திமுக மாமன்ற உறுப்பினர் சரவணனுக்கு எதிராக குடும்பத்துடன் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொல்லப் போவதாகவும். முடிவு.
இது தொடர்பாக பாதிக்கப்பட்டுள்ள பெண் செல்வி என்பவர் தனது இரண்டு பெண்களுடன் கொலை மிரட்டல் செய்து வரும் சேலம் மாநகராட்சியின் 56வது கோட்ட திமுக மாமன்ற உறுப்பினர் சரவணன் என்பவரின் புகைப்படத்துடன் அவருக்கு எதிராக புகார் அளிக்க சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்திருந்தார். பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் குறித்து ஆட்சியரிடம் வழங்கப்பட்ட அந்த மனுவில், சேலம் கருங்கல்பட்டி களரம்பட்டி பிரதான சாலை இரண்டாவது குறுக்கு தேர்வு பகுதியை சார்ந்தவர்கள் சிவலிங்கம் மற்றும் மாதேஸ்வரி தம்பதியினர். இவர்களது இளைய மகன் ரமேஷ் இவருக்கும் செல்வி என்ற பெண்ணுக்கும் கடந்த 18 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து வைத்தனர் என்றும் இதன் பலனாக கார்த்திகா மற்றும் கனிஷ்கா என்ற இரண்டு பெண் குழந்தைகள் தங்களுக்கு உள்ளதாகவும், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு தனது மாமனார் சிவலிங்கம் மற்றும் மாமியார் மாதேஸ்வரி வீட்டில் குடியிருந்து வருவதாக அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தது.
இந்த நிலையில் தனது கணவர் சரிவர வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வருவதாகவும் இதனால் எனது மாமனாரும் மாமியாரும் மற்றும் கணவரின் சகோதரர் யுவராஜ் மற்றும் தனது கணவரின் அண்ணன் சரவணன் ஆகியோர் வீட்டை காலி செய்ய வேண்டும் என்று 56 வது கோட்ட திமுக மாமன்ற உறுப்பினர் ஏ எஸ் சரவணன் மற்றும் அவருடன் இருக்கும் பம்பாய் முருகேசன் ஆனந்த் விஜி உட்பட பத்துக்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து ஒன்றாம் தேதி நான் குடியிருக்கும் இந்த வீட்டை வரும் தீபாவளிக்குள் காலி செய்யவில்லை என்றால் என்னையும் எனது இரண்டு பெண் குழந்தைகளையும் பெட்ரோல் ஊற்றி கொளுத்தி விடுவேன் என மிரட்டி சென்றதாக அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் பிருந்தா தேவி அவர்கள் வீட்டை காலி செய்ய சொல்லி கொலை மிரட்டல் விடுத்த 56வது கோட்ட திமுக மாமன்ற உறுப்பினர் ஏ எஸ் சரவணன் மற்றும் அவருடன் இருக்கும் பத்துக்கு மேற்பட்ட அடையாளம் தெரியாத நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பெண் செல்வி என்பவர் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த புகார் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தும் தற்பொழுது வரை எந்த நடவடிக்கையும் இல்லாத காரணத்தினால் தற்பொழுது மாவட்ட ஆட்சியரிடம் நேரில் வந்து புகார் மனு அளித்துள்ளதாகவும், தனது கணவருக்கு சொத்துக் கொடுக்கக் கூடாது என்ற நோக்கில் தனது மாமனார், மாமியார், கணவனின் அண்ணன் மற்றும் சகோதரர் ஆகியோரிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு மாமன்ற உறுப்பினர் சரவணன் அடியாட்களுடன் தங்களை மிரட்டுவது எந்த வகையில் நியாயம் என கேள்வி எழுப்பி உள்ளதோடு, ஒருவேளை மாவட்ட ஆட்சியரும் இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில் எனது இரண்டு பெண் குழந்தைகளுடன் குடும்பமாக சேர்ந்து விஷம் அறிந்து 56வது கோட்டை திமுக மாமன்ற உறுப்பினர் ஏ எஸ் சரவணன் மற்றும் அவரது கூட்டாளிகள் 10 பேருக்கு எதிராக தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார். சேலம் மாநகராட்சி 56வது கோட்டை திமுக மாமன்ற உறுப்பினருக்கு எதிராக ஒரு குடும்பமே சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்ததோடு மட்டுமல்லாமல் நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில் அவருக்கு எதிராக தங்களது குடும்பமே தற்கொலை செய்து கொள்ளும் என்று மிரட்டி உள்ள சம்பவம் சேலத்தில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



0 coment rios: