வியாழன், 20 நவம்பர், 2025

மும்பையிலிருந்து பவானிக்கு கடத்தி கொண்டு வந்த 10 நாள் பெண் குழந்தை மீட்பு – பவானியை சேர்ந்த நபர் கைது... ஈரோடு மாவட்டத்தில் தொடரும் குழந்தை கடத்தல்.. !

மும்பையிலிருந்து பவானிக்கு கடத்தி கொண்டு வந்த 10 நாள் பெண் குழந்தை மீட்பு – பவானியை சேர்ந்த நபர் கைது... ஈரோடு மாவட்டத்தில் தொடரும் குழந்தை கடத்தல்.. !

ஈரோடு மாவட்டம் பவானி மீன் மார்க்கெட் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் குழந்தை கடத்தி கொண்டு வந்து விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது என்கிற ரகசிய தகவல் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு கிடைத்தது.

இதையடுத்து பவானி போலீசார், ஈரோடு சைல்டு லைன் அதிகாரிகளுடன் இணைந்து சம்பந்தப்பட்ட வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு பிறந்து 10 நாட்களே ஆன பெண் குழந்தை இருப்பது தெரியவந்தது.

உடனடியாக அந்த வீட்டின் வசிப்பாளர் பரவீன் (31) என்பவரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். 
விசாரணையில் —
மும்பையில் பிறந்த 10 நாள் பெண் குழந்தையை இரண்டு பெண்கள் பவானிக்கு கொண்டு வந்து, விற்பனைக்காக பரவீன் இடம் ஒப்படைத்தது உறுதி செய்யப்பட்டது.

இந்த குழந்தையை அவர்கள்
• பெற்றோரிடம் மூளைச் செலவு செய்து வாங்கி வந்தார்களா?
• அல்லது நேரடியாக கடத்தி வந்தார்களா?
என்பதையும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

மீட்கப்பட்ட குழந்தை பாதுகாப்பு இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டது. பரவீன் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

குழந்தையை பவானிக்கு கொண்டு வந்த இரு பெண்களை பிடிக்க பவானி காவல் துறை அதிகாரிகள் தற்போது மும்பைக்கு விரைந்து செல்கின்றனர்.

இதற்கு முன்பும்,
• பெங்களூரில் இருந்து 8 மாத பெண் குழந்தை கடத்தி வந்த வழக்கில் இரண்டு பெண்கள் கைது,
• சித்தோடு பகுதியில் ஆந்திராவைச் சேர்ந்த தொழிலாளர்களின் 1.5 வயது பெண் குழந்தை கடத்தப்பட்டு 25 நாட்களில் மீட்பு போன்ற சம்பவங்கள் நடந்துள்ள நிலையில்,

இப்போது மும்பையில் இருந்து 10 நாள் குழந்தை பவானியில் மீட்கப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: